என்னடா புரியவில்லைன்னு ஒரு போஸ்டா யோசிக்காதிங்க... எனக்கு என்ன புரியலனா
விஷயம் 1) தொடர்ந்து பல வாரமா முல்லை பெரியாறு விவகாரத்தில தமிழக மக்கள் போராடுறாங்க, கேரளா அரசாங்கம் இந்திய ஒருமைப்பாடுக்கு எதிரா நடந்துக்குது அதை பத்தி ஒரு முடிவும் எடுக்காம மத்திய அரசு அமைதியா இருக்கு.
விஷயம் 2) தொடர்ந்து பல மாசமா கூடங்குளத்துல மக்கள் போராடறாங்க ஆனா மன்மோகன் சிங் "கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும்ன்னு" ரஷ்யாவில் சொல்லுறாரு.
விஷயம் 3) தொடர்ந்து பல வருசமா தமிழக மீனவன் இலங்கை இராணுவதலா தாக்க படுறாங்க இதுக்கும் ஒரு முடிவு இல்லை அதுவும் மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க மாட்டுது.
விஷயம் 4) காவேரி நீர் பிரச்சனையை இன்னும் முடிக்கல.
விஷயம் 5) உலகத்துல எல்லா இடத்துலையும் தமிழனை மட்டும் அடிக்க தயங்கரதே இல்லை,யோசிக்காம எதை பத்தியும் கவலை படாம அடிக்கறாங்க.
இவ்வளவு விசயத்துல தீர்க்கமான ஒரு முடிவு எடுக்காம இந்திய அரசாங்கம் இருக்கு ஏன் என்று புரியவில்லை.
எனக்கு என்னமோ தமிழ்நாட்டு மக்கள் இந்திய குடி மக்களா மத்திய அரசு கருதவில்லையோனு நினைக்கறேன். தமிழன், தமிழ் நாட்டுகாரனா நாலு நாள் கத்துவான் அப்பறம் அவன் அவன் அவன் வேலை பாக்கபோறான் அப்படின்னு ஒரு எண்ணமானு புரியல.
யாரையாவது கேட்ட நம்ம அரசியல்வாதிங்க சரி இல்ல அவங்க கிட்ட ஒரு ஒற்றுமை இல்லை சொல்லு வாங்க அவங்க சொல்லுறது சரின்னாலும் முதல தமிழன் கிட்ட, தமிழ் மக்கள் கிட்ட ஒத்துமை இருக்கானு கேட்டா எனக்கு என்னமோ இல்லைன்னு தான் தோணுது.
ஏன்யென்றால் ஈழ தமிழர்கள் பிரச்சனை ஆகட்டும் , காவேரி பிரச்சனை ஆகட்டும், கூடங்குளம் பிரச்சனை ஆகட்டும், முல்லை பெரியாறு பிரச்சனை ஆகட்டும் எதாவது ஒரு பிரச்சனைக்கு மொத்த தமிழ் நாடும் ஒன்ன ஒரே குரல் குடுத்து போராடி இருக்க.. இல்லை ஏன் யென்றால் நம்ம வேலை நமக்கு முக்கியம்.
இங்க கூடங்குளத்துல தங்கள் உடமை, உயிர் பற்றிய பயத்துல மக்கள் போரடறங்க ஆனா, நம்ம பிரதமர் அசால்டா ரஷ்யா போய் ரஷ்ய உறவு முக்கியம், கொடுத்த வாக்குறுதி காபற்றப்படுமுன்னு சொல்லுறாரு இவரு நமக்கு பிரதமர இல்லை ரஷ்ய நட்டு அடிமையானு தெரியல.
அதுபோல முல்லை பெரியாறு பிரச்சன்னைய தீர்க்க முடியல அப்பறும் இந்த ஆள் என்ன ம...க்கு அங்க பிரதமரா இருக்காருன்னு தெரியல.
இந்த உலகுத்துல சொந்த நாட்டுல ஒரு மாநிலத்துல இருந்து ஒரு மாநிலத்துக்கு முதன் முதல அகதியா வந்த பெருமை தமிழர்களுக்கு தான் சேரும் அதை வாங்கி தந்த பெருமை இப்போதைய காங்கிரஸ் அரசுக்கு தான் சேரும்.. Mr. Manmohan you did a wonderful job.. simply superb..keep it up...
இலங்கைக்கு பயப்படற முதல் நாடு இந்தியாவா தான் இருக்கும் அதுவும் இந்த தைரியம் இல்லாத இந்த பிரதமரா தான் இருக்கும்.
வெக்கமா இருக்கு இதை எல்லாம் பாக்கும் போது ஒரு நாளைக்கு இந்தியர்கள் தங்களை இந்தியர்னு சொல்ல வெட்க பட கூடிய நாள் வெகு தொலவில் இல்லை இந்த மத்திய அரசாங்கம் அதை கூடிய சிக்கிரம் கொண்டு வந்துடும்.
இலங்கைய அடக்க முடியலையா சொல்லுங்க சொல்லிட்டு ஒவ்வொரு மீனவனுக்கும் துப்பாக்கி கொடுத்து மீன் புடிக்க கடலுக்கு அனுப்புங்க அதுக்கு அப்புறம் தமிழ் மீனவன் தன்னை காப்பாதிக்க முடியாம செத்தாலும் பரவா இல்லை நாங்க உங்களை கேள்வி கேட்க மாட்டோம்.
எங்களுக்கு வேண்டியது முடிவு ஒரு நிரந்தரமான அதை எடுக்க எது தடுக்குதுன்னு புரியவில்லை.
ஏன் தமிழர்கள் விசயத்துல இவ்வளவு பாகுபாடு நாங்க அப்படி என்ன தப்பு பண்னோம்.
இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கூடங்குளம், முல்லைபெரியாறு என்று தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது தமிழர்களை இந்த அளவுக்கு அலட்சியப்படுத்துவது நல்லதற்கல்ல.
ஒரு வேலை இந்தியாவின் ஒரு பகுதியா தமிழ்நாடு இருக்க கூடாதுன்னு நினைகறாங்கலோனு புரிய வில்லை ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்திய துண்டு துண்டாக போகும் என்றால் முதலில் உடையும் மாநிலம் தமிழகமாக தான் இருக்கும்.
ஒரு காலத்தில் ஒற்றுமைக்கு பேர் போன , வீரத்திற்கு பேர் போன, போர் குணம் நிறைந்த தமிழர்கள் இன்று அதை எல்லாம் தொலைத்து விட்டு இன்று எதுவும் அற்று இன்று இந்த மண்ணில் ஒரு புழுவை போல வாழ்கிறார்கலோனு ஒரு சந்தேகம் வருது என்று இந்த நிலை மாறும் என்று புரியவில்லை.
அனால் ஒன்று மட்டும் நிச்சயம் தமிழ் இனத்திற்கெதிரான துரோகங்கள் நல்லதற்கல்ல.
நாம் தமிழர்கள் தானா???
ReplyDelete