Search This Blog

Sunday, March 18, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

ஓர் ஆட்சி ஓர் இடை தேர்தல்

ஒரு ஆட்சியில் இடை தேர்தல் வருகிறது என்றல்  ஒரு நல  ஆட்சியாளர்களுக்கு   கொண்டாட்டமாக இருக்கும் ஏன் என்றால் அப்போது தான் மக்கள் தங்கள் ஆட்சிக்கு கொடுக்கும் நல் மதிப்பெண் என்னவென்று ஆட்சியாளர்களுக்கு தெரிய வரும்.

இப்படி எல்லாம் நம்ம ஆளுங்க நினைக்கராங்கானு தப்பு தப்பா நினைச்சிடாதிங்க ஏன்ணா நம்ம ஆளுங்க அதை ஒரு கவுர பிரச்சனையா தான் நினைக்கறாங்க இல்லனா ஒரு இடை தேர்தலுக்கு 32 அமைச்சர்கள், 154 எம் எல் எ க்கள்,  30க்கும் மேற்பட்ட மாவட்ட செயலளர்கள்,வட்டம், ஒன்றியம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாம் சேர்த்த ஒரு ஆயிரம் பேருக்கு மேல வரும் இது ஆளும் கட்சி இது போல எதிர் கட்சி, தி மூ க அப்புறம் ம தி மூ க இவங்க எல்லாம் சேர்த்த ஒரு ஐயாயிரம் பேரு இருப்பாங்க எல்லாம் எதுக்கு ஒரு இடை தேர்தலுக்காக.


உண்மையில் ஒரு நல்ல கட்சி என்ன பண்ணனும் ஆளும் கட்சியா இருந்த வேட்பாளார அறிவிச்சிட்டு அவங்கள வேலைய பார்க்க சொல்லிவிட்டு இவங்க மக்கள் பணியை தானே செய்யணும். ஆனா என்ன நடக்குது இவங்க மக்கள் பணியை செய்யல அதை விட்டுட்டு ஒரு இடை தேர்தலுக்கு இவ்வளவு  ஆர்ப்பாட்டம் தேவையா ?

தானே புயல் வந்து பாதிக்க பட்ட கூட இவ்வளவு பேரு ஜெயலலிதா அனுப்பி வைக்கல இப்படி அனுப்பி இருந்த சீக்கிரம் கடலூர் மக்கள் புயல் பாதிப்புல  இருந்து மீண்டு இருப்பாங்க ஆனா ஜெயலலிதாவிற்கு அது கவுர கொறைச்சலா தெரியல இது.

வர மே மாதம் வந்த அ தி மு க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது.
பேருந்து கட்டணம் உயர்வு, மக்கள் உபயோக பொருட்கள் விலை உயர்வு,தானே புயல் நிவாரண பாதிப்பு மற்றும் மின்சார பிரச்னை இவ்வளவு பிரச்சனை இருக்கு ஆனா ஜெயலலிதாவிற்கு பழி வாங்கவே நேரம் சரியாய் இருக்கு.

ஜெயலலிதா இந்த இடை தேர்தலை சந்திக்க பயப்படுகிறார் எனேன்றால்
ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிகை இல்லை. இது எதை காட்டுகிறது என்றால் அவர்களின் திராணி குறைந்து விட்டதை!!! அவர் எந்த தைரியத்தில் சவால் விட்டார் என்று தெரிய வில்லை ஒரு வேளை   அவர்கள் ஆளும் கட்சி என்ற தைரியதிலோ?


ஆனால் உண்மையில் மக்கள் அவர் மீது வைத்த நம்பிகையை கெடுத்து விட்டார் என்பது உண்மை. பணம் குடுத்து, ஆளும் கட்சி என்ற அதிகாரம் கொண்டு, அதிகார துஷ் பிரயோகத்தால் பெரும் வெற்றி உண்மையான வெற்றி இல்லை என்பது தான் உண்மை.


ஒரு விடியல்:


உண்மையில் வை.கோ தமிழக அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை தான் உருவாக்கிறார்.  பண பலம் ,ஆட்பலம், அதிகார பலம் என்று கொண்ட கட்சிளுக்கு மத்தியில் உண்மையான தொண்டர்களை கொண்டு தன் கொள்கைகளை மட்டும் கொண்டு ஒட்டு வேட்டையாடி வருகிறார்.

இந்த தேர்தலில் இவர் கட்சி தோற்றால் கூட அது தோல்வி இல்லை இவர் பெறும் ஒவ்வெரு வாக்கும் இவரின் கட்சின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் நம்பிக்கை விதைகள்.

தலைமை என்னதான் நல்லா இருந்தாலும் அடிமட்ட தொண்டன் வரை எல்லாரும் நல்லா இருந்த தான் கட்சி வளர்ச்சியடையும்.
எனக்கு தெரிந்த ஒரு ம தி மு க தொண்டர் சாதாரன கவுன்சிலரா தன் அரசியல் வாழ்கைய ஆரம்பிச்சார் இன்னைக்கு அவர் ஒரு பஞ்சாயத்தின் துணை தலைவர் வரை வளர்ந்து உள்ளார்.

இது பாரட்ட வேண்டிய விஷயம் தான் ஒழுங்காக வந்து இருந்தால் ஆனால் வளர்ந்த விதமே வேறு. நாளை ஒரு வேலை ம தி மு க ஆட்சிக்கு வந்தால் அவர் கட்சியினர் இந்த மாதிரி ஊழல் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

வை கோ இப்போதே கட்சியில் களை எடுத்தால் கட்சிக்கு நல்லது.

சபாஷ் சச்சின்:

தனது சதத்தில் நூறாவது சதத்தை அடைந்து விட்டார். அவர் மென்மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஆண்டவனை பிராதிப்போம்.


சச்சின் சதம் அடித்து இந்திய அணி தோற்று விட்டால் சிலர் சச்சினை குறை சொல்லுவது ஏன் என்று தெரியவில்லை. போன மட்ச்ல சச்சின் சதம் அடித்தும் இந்திய அணி தோற்று விட்டது கேட்டால் நாம் 20 குறைவாக எடுத்து விட்டோம் என்று அது சச்சினால தான் நாம் எடுக்க முடியாம போய் விட்டது சொல்லுறாங்க.


ஆனா உண்மையில் என்ன நடந்ததுனா நம்ம பௌலர்கள் நல்லா பௌலிங் போடலை அதனால தான் நாம் தோத்தோம்.


இத்தனைக்கும் பங்களாதேஷ் பாகிஸ்தான் கிட்ட இத வீட கம்மியான ஸ்கோர் எடுக்க முடியாம தோத்துட்டாங்க. பாகிஸ்தான் எடுத்தது 262  நாம எடுத்தது 289 பங்களாதேஷ் நம்ம ஸ்கோர் சேஸ் பண்ணி எடுத்துட்டாங்க ஆனா பாகிஸ்தான் கிட்ட தோத்துட்டாங்க இதை கேட்ட எவனும் பதில்  சொல்ல மாட்டாங்க.

ஒன்னு மட்டும் நிச்சயம் நாம 500௦ ரன் அடிச்சா கூட தோத்துடுவோம் ஏன்னா நம்ம பௌலிங் அவ்வளவு ஸ்ட்ரோங்!!!

நண்பர் ஒரு அறிமுகம்:

Hi Raja ... Keep writing more.. I love your writeup's. But I'm not good at writing in Tamil. Keep going.

இப்படி சொன்னது நமது நண்பர் Vish முழு பேர் தெரியல இது நமது நண்பரின் முதல் கமெண்ட் அதுக்கு அப்பறம் நிறைய கமெண்ட் போட்டு இருக்கிறார் இவரின் கமெண்ட் தான் என்னை உற்சாகபடுத்தி, ஊக்கபடுத்தி  உள்ளது. 
நன்றி Vish .   

பாராட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் கமெண்ட் முலம் நான் அறிந்து கொண்டேன். ஏனெனில் வேலை பளுவின் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை ஆனால் உங்கள் பாராட்டு என்னை தொடர வைத்துள்ளது மீண்டும் நன்றி.

ஒரு வாரம் நண்பனுடன் வட நாட்டிற்கு செல்கிறேன் ஆகையால் ஒரு வாரத்திற்கு நமது நண்பர்களை சந்திக்க முடியாது.

அன்புடன் 
ராஜா
       

7 comments:

  1. btw - Raja! Are you into politics by any chance ? Your narration and tone frequency is very well in sync with all political speech .. pep talks. Any way, here is what I think. J Madam is a highly intellectual and has all leadership qualities which is working on the wrong side. If it would have worked rightly she will be best leader ever you can see. To be precise, SHE don't deserve to serve the state .

    Now coming to Vai Ko, the day he joined J Madam , he lost all his credibility. Stalin is a sensible guy although there are issues around DMK. But it is good for Vai Ko to join stalin and support. Stalin should also give due respect for Vai Ko for all the contribution he has done for DMK in the past.


    Sachin is a blessed person. No doudts. It is a RECORD and we all appreciate it. One thing I learnt from him "KEEP DOING WHAT YOU LOVE! and if you look back you will get all things you need without aiming for it" (Fame, Money, Satisfaction and Respect). He don't know much, other than cricket and his guesture is, "IT IS NOT REQUIRED ALSO". All he has done is "STAYED FOCUSED!"

    We need to accept the fact that BANGALADESH TEAM did a stellar performance. They deserve that win and I enjoyed their show from the young boys with lots of confidence! Hope you would have enjoyed India VS Pakistan match today.

    :) Nice to see a comment about me. I'm happy that you are motivated to write more. Enjoy your trip for the week and have fun!

    Vish

    ReplyDelete
  2. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hi, yes.. how are you... sorry,due to work not able to check and reply to you immediately

      Delete
  3. Nanraga irukinren Nanba. Looking forward for more articles from you. may be lighter ones as well :)

    ReplyDelete
  4. You seems to be not writing these days ?

    ReplyDelete
  5. Sorry I was busy with work.so unable to post.. hope hereafter I can post...

    ReplyDelete