Search This Blog

Sunday, March 18, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

ஓர் ஆட்சி ஓர் இடை தேர்தல்

ஒரு ஆட்சியில் இடை தேர்தல் வருகிறது என்றல்  ஒரு நல  ஆட்சியாளர்களுக்கு   கொண்டாட்டமாக இருக்கும் ஏன் என்றால் அப்போது தான் மக்கள் தங்கள் ஆட்சிக்கு கொடுக்கும் நல் மதிப்பெண் என்னவென்று ஆட்சியாளர்களுக்கு தெரிய வரும்.

இப்படி எல்லாம் நம்ம ஆளுங்க நினைக்கராங்கானு தப்பு தப்பா நினைச்சிடாதிங்க ஏன்ணா நம்ம ஆளுங்க அதை ஒரு கவுர பிரச்சனையா தான் நினைக்கறாங்க இல்லனா ஒரு இடை தேர்தலுக்கு 32 அமைச்சர்கள், 154 எம் எல் எ க்கள்,  30க்கும் மேற்பட்ட மாவட்ட செயலளர்கள்,வட்டம், ஒன்றியம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாம் சேர்த்த ஒரு ஆயிரம் பேருக்கு மேல வரும் இது ஆளும் கட்சி இது போல எதிர் கட்சி, தி மூ க அப்புறம் ம தி மூ க இவங்க எல்லாம் சேர்த்த ஒரு ஐயாயிரம் பேரு இருப்பாங்க எல்லாம் எதுக்கு ஒரு இடை தேர்தலுக்காக.


உண்மையில் ஒரு நல்ல கட்சி என்ன பண்ணனும் ஆளும் கட்சியா இருந்த வேட்பாளார அறிவிச்சிட்டு அவங்கள வேலைய பார்க்க சொல்லிவிட்டு இவங்க மக்கள் பணியை தானே செய்யணும். ஆனா என்ன நடக்குது இவங்க மக்கள் பணியை செய்யல அதை விட்டுட்டு ஒரு இடை தேர்தலுக்கு இவ்வளவு  ஆர்ப்பாட்டம் தேவையா ?

தானே புயல் வந்து பாதிக்க பட்ட கூட இவ்வளவு பேரு ஜெயலலிதா அனுப்பி வைக்கல இப்படி அனுப்பி இருந்த சீக்கிரம் கடலூர் மக்கள் புயல் பாதிப்புல  இருந்து மீண்டு இருப்பாங்க ஆனா ஜெயலலிதாவிற்கு அது கவுர கொறைச்சலா தெரியல இது.

வர மே மாதம் வந்த அ தி மு க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது.
பேருந்து கட்டணம் உயர்வு, மக்கள் உபயோக பொருட்கள் விலை உயர்வு,தானே புயல் நிவாரண பாதிப்பு மற்றும் மின்சார பிரச்னை இவ்வளவு பிரச்சனை இருக்கு ஆனா ஜெயலலிதாவிற்கு பழி வாங்கவே நேரம் சரியாய் இருக்கு.

ஜெயலலிதா இந்த இடை தேர்தலை சந்திக்க பயப்படுகிறார் எனேன்றால்
ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிகை இல்லை. இது எதை காட்டுகிறது என்றால் அவர்களின் திராணி குறைந்து விட்டதை!!! அவர் எந்த தைரியத்தில் சவால் விட்டார் என்று தெரிய வில்லை ஒரு வேளை   அவர்கள் ஆளும் கட்சி என்ற தைரியதிலோ?


ஆனால் உண்மையில் மக்கள் அவர் மீது வைத்த நம்பிகையை கெடுத்து விட்டார் என்பது உண்மை. பணம் குடுத்து, ஆளும் கட்சி என்ற அதிகாரம் கொண்டு, அதிகார துஷ் பிரயோகத்தால் பெரும் வெற்றி உண்மையான வெற்றி இல்லை என்பது தான் உண்மை.


ஒரு விடியல்:


உண்மையில் வை.கோ தமிழக அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை தான் உருவாக்கிறார்.  பண பலம் ,ஆட்பலம், அதிகார பலம் என்று கொண்ட கட்சிளுக்கு மத்தியில் உண்மையான தொண்டர்களை கொண்டு தன் கொள்கைகளை மட்டும் கொண்டு ஒட்டு வேட்டையாடி வருகிறார்.

இந்த தேர்தலில் இவர் கட்சி தோற்றால் கூட அது தோல்வி இல்லை இவர் பெறும் ஒவ்வெரு வாக்கும் இவரின் கட்சின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் நம்பிக்கை விதைகள்.

தலைமை என்னதான் நல்லா இருந்தாலும் அடிமட்ட தொண்டன் வரை எல்லாரும் நல்லா இருந்த தான் கட்சி வளர்ச்சியடையும்.
எனக்கு தெரிந்த ஒரு ம தி மு க தொண்டர் சாதாரன கவுன்சிலரா தன் அரசியல் வாழ்கைய ஆரம்பிச்சார் இன்னைக்கு அவர் ஒரு பஞ்சாயத்தின் துணை தலைவர் வரை வளர்ந்து உள்ளார்.

இது பாரட்ட வேண்டிய விஷயம் தான் ஒழுங்காக வந்து இருந்தால் ஆனால் வளர்ந்த விதமே வேறு. நாளை ஒரு வேலை ம தி மு க ஆட்சிக்கு வந்தால் அவர் கட்சியினர் இந்த மாதிரி ஊழல் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

வை கோ இப்போதே கட்சியில் களை எடுத்தால் கட்சிக்கு நல்லது.

சபாஷ் சச்சின்:

தனது சதத்தில் நூறாவது சதத்தை அடைந்து விட்டார். அவர் மென்மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஆண்டவனை பிராதிப்போம்.


சச்சின் சதம் அடித்து இந்திய அணி தோற்று விட்டால் சிலர் சச்சினை குறை சொல்லுவது ஏன் என்று தெரியவில்லை. போன மட்ச்ல சச்சின் சதம் அடித்தும் இந்திய அணி தோற்று விட்டது கேட்டால் நாம் 20 குறைவாக எடுத்து விட்டோம் என்று அது சச்சினால தான் நாம் எடுக்க முடியாம போய் விட்டது சொல்லுறாங்க.


ஆனா உண்மையில் என்ன நடந்ததுனா நம்ம பௌலர்கள் நல்லா பௌலிங் போடலை அதனால தான் நாம் தோத்தோம்.


இத்தனைக்கும் பங்களாதேஷ் பாகிஸ்தான் கிட்ட இத வீட கம்மியான ஸ்கோர் எடுக்க முடியாம தோத்துட்டாங்க. பாகிஸ்தான் எடுத்தது 262  நாம எடுத்தது 289 பங்களாதேஷ் நம்ம ஸ்கோர் சேஸ் பண்ணி எடுத்துட்டாங்க ஆனா பாகிஸ்தான் கிட்ட தோத்துட்டாங்க இதை கேட்ட எவனும் பதில்  சொல்ல மாட்டாங்க.

ஒன்னு மட்டும் நிச்சயம் நாம 500௦ ரன் அடிச்சா கூட தோத்துடுவோம் ஏன்னா நம்ம பௌலிங் அவ்வளவு ஸ்ட்ரோங்!!!

நண்பர் ஒரு அறிமுகம்:

Hi Raja ... Keep writing more.. I love your writeup's. But I'm not good at writing in Tamil. Keep going.

இப்படி சொன்னது நமது நண்பர் Vish முழு பேர் தெரியல இது நமது நண்பரின் முதல் கமெண்ட் அதுக்கு அப்பறம் நிறைய கமெண்ட் போட்டு இருக்கிறார் இவரின் கமெண்ட் தான் என்னை உற்சாகபடுத்தி, ஊக்கபடுத்தி  உள்ளது. 
நன்றி Vish .   

பாராட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் கமெண்ட் முலம் நான் அறிந்து கொண்டேன். ஏனெனில் வேலை பளுவின் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை ஆனால் உங்கள் பாராட்டு என்னை தொடர வைத்துள்ளது மீண்டும் நன்றி.

ஒரு வாரம் நண்பனுடன் வட நாட்டிற்கு செல்கிறேன் ஆகையால் ஒரு வாரத்திற்கு நமது நண்பர்களை சந்திக்க முடியாது.

அன்புடன் 
ராஜா
       

Saturday, March 17, 2012

இந்தியராக இருக்க விடுங்கள் - தமிழருவி மணியன்

இந்த கட்டுரை ஜூனியர் விகடனில் படித்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது அதனால் உங்களுக்காக









 

Monday, March 12, 2012

என்ன செய்ய போகிறோம் நாம் ?


நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம் ஆனால் அதை பற்றி நாம் எல்லோரும் உணர்ந்தோமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நாம் நாம் என்று குறிப்பிடுவது தமிழர்களை. 

சரி தமிழர்கள் என்ன முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்று நினைகின்றீர்களா? அது ஒன்றும் இல்லை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய ஆதரிக்க வேண்டும் அதற்கு நாம் ஒரு குரலில் குரல் கொடுத்து இந்திய அரசை ஆதரிக்க வைக்க வேண்டும்.

நாம் இப்போது இந்த வாய்ப்பை தவற விட்டால் பின் எப்போதும் இலங்கை தண்டிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்காது.

உண்மையில் இப்போது என்ன நடந்து இருக்க வேண்டும். நாம் நம் மக்களுடன் வீதியில் இறங்கி இருக்க வேண்டும் ஏன் என்றால் இன்னும் இந்திய அரசு தீர்மானத்தை பற்றி வெளிப்டையாக ஒரு கருத்தும் கூறவில்லை இப்போது இந்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வில்லை என்றால் பின் எப்போதும் இலங்கையை போர் குற்றத்திற்கு தண்டிக்க முடியாமல் போய்விடுமோ என்று அச்ச படுகிறேன்.

இந்திய அரசு பல முறை இந்த மாதிரி தமிழர்களுக்கு எதிரான பிரச்சனையில் காலை வாரி உள்ளது  அதனால் நாம் இப்பொழுது விழித்து எழுந்து வீதியில் இறங்கி போராடி இந்திய அரசை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வைக்க வேண்டும்.

சேனல் 4 இருக்கும் அக்கரையில் நான்கில் 1 பங்கு இருக்குமா என்பது சந்தேகமே? உண்மையில் நாம் எப்போதே பொங்கி இருக்க வேண்டும் ஆனால் நாம் நம் உணர்வுகளை விற்று விட்டோமோ என்று தோன்றுகிறது.

கீழ் காணும் வீடியோ காட்சிகளை காணும் போது கல் நெஞ்சமும் கரைந்து போகும் ஆனால் நம் நெஞ்சம் கரையவில்லை இவர்களுக்காக குரல் குடுக்க மனம் வரவில்லை என்பதே வேதனை. 





இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்து இருக்கிறார்கள். 

இவர்களுக்கு தண்டனை வேண்டாமா? இவர்களும் ஒரு வகையில் நம் உறவுகள் தான் அதை நாம் ஏன் உணர மறுக்கிறோம் என்று தெரியவில்லை.  

இப்போது பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ வெளியிட போகிறதாம்  சேனல் 4! மிக மிக நெருக்கத்தில் வைத்து பாலச்சந்திரனை சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் இலங்கை வீரர்கள்.
அது மட்டுமில்லாமல் சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் உள்ளதாம். 



இந்த குற்றவாளிகளுக்கு நாம் இப்பொழுது தண்டனை வாங்கி தராவிட்டால் இந்த உலகம் உள்ள வரை தமிழர்களை  தூற்றும்  இந்த போர் குற்றவாளிகளுக்கும் நமக்கும் வேற்றுமை இல்லை என்று தூற்றும்.
 
வீழ்வது இழிவாகாவது வீழ்ந்து கிடப்பது இழிவு அதனால் இப்பொழுது நம் ஒற்றுமையை காட்ட தவறி விட்டால் பின் எப்பொழுதும் எந்த பிரச்சனைகளுக்கும் இந்திய அரசு நமக்கு துணை இருக்காது இதை நாம் உணர வேண்டும்.

தயவு செய்து சொல்லுங்கள் என்ன செய்ய போகிறோம் நாம்?