Search This Blog

Friday, February 10, 2012

நாம் ஏமாறப்போகின்றோமா?

கூடங்குளம் அணு உலையின் பயன் பற்றி ஒரு நாளிதளின்  வெப்சைட்யில் ஒருவர் கொடுத்த கமெண்ட்டில் கீழ் கண்ட பகுதியை படித்தேன் அது உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன் 

கூடங்குளம் அணு உலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை போக்குமா? 

கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 21000=2000mw. அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும்=1200mw. எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது.

இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.

ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை( அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது )=1200mw.

இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540mw.ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்=405mw.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.

இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு=305mw.
(பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை) 

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். 

அணு உலை =13000 croress rs. runing cost 5000 crores.safeing 900 tone uranium 50000 years . 


யு ரேனியம் 50000 வருடங்களுக்கு பாதுகாத்து வரலாம் ஆனால் பாதுகாக்கும் போது ஏதேனும் குறைபாட்டினால் அல்லது தனி மனித தவறினால் அல்லது இயற்கை சீற்றத்தால் விபத்து நடந்தால் ஏற்படும் இழப்பு எக்கசக்கம் . 

மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw and more .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவு  செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=2,625mw.இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

காற்றாலை=700mw.தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).

உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).

வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.

மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்க பட்ட தளத்தில் படிக்கலாம். 

படிக்க இங்கே  கிளிக் செய்யவும் 


வெகு சிலர் தான் அணு உலை திட்டத்தால் நன்மை ஏதும் இல்லை என்று கூறுவார்கள் . இதை ஏற்பதற்கு பலர் தயாராக இருக்க மாட்டார்கள். பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு ஏற்ப அனுபவித்து தெரிந்து கொள்வர். "அவசர தேவைக்கு உடனடி மின்சாரம் " என்ற மாயை அவர்களின் கண்களை மறைத்து வைத்து இருக்கிறது அதனால் எவ்வளவோ எடுத்துக்கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் . இப்படி இருந்தால் எப்படி இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்க முடியும். தவறான எண்ணம் இருக்ககூடாதுதான் எனினும் அணு உலை விபத்து என்று ஒன்று வரவேண்டும். அப்போதுதான் "அணு உலை வேண்டும் " என்று கூக்குரலிடுபவர்களுக்கு அதன் தாக்கம் புரியும்.


மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா

Wednesday, February 8, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

கடந்த ஒரு வாரமா ஆபீஸ்ல நிறைய வேலை அதனால ஒரு போஸ்ட் கூட போட முடியல ஆனா இந்த ஒரு வாரதல ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து இருக்கு அதுல முக்கியமானது நம்ம கேப்டன் ரவுசு தான்.

சபாஷ் கேப்டன்.

நம்ம முதலமைச்சர் ஜெயலலிதா அடாவடி தனம் ஒலகம் அறிஞ்சது அவங்களுக்கு எல்லாம் அடாவடி தனமா பதில் சொல்லணும் அது தான் முறை. என்னை கேட்ட விஜயகாந்த் சட்ட சபைல நடந்து  கிட்டது தப்புனு சொல்ல மாட்டேன் ஏன்னா ஜெயலலிதாவும் சரி அவுங்க எம் எல் எ களும் சரி நடந்து கிட்ட முறை கொஞ்சம் கூட சரி இல்ல அவங்களுக்கு அப்படி தான் பதில் சொல்லணும். சபாஷ் கேப்டன் உங்க கிட்ட நாங்க நிறைய எதிர்பாக்கறோம்.



அடுத்தது ஜெயலலிதா சொல்லராங்க சட்ட சபையில் விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரி இல்லை . இதை தான் சாத்தான் வேடம் ஓதுதுன்னு சொல்லுவாங்க.. இவர் ஜானகி அம்மாள் முதலமைச்சராக இருந்த போது சட்ட சபையில் நடந்து கொண்ட முறை உலக அறிஞ்ச ஒன்று.. சட்ட சபையில் சென்ன ரெட்டி பற்றி இவர் கூறிய புகார் உலகம் அறிஞ்ச காமெடி.. தாமரை கனியை வைத்து இவர் சபையில் கொடுத்த பஞ்சுகள் ஏராளம்.

முதலில் இவர் கற்று கொள்ள வேண்டும் சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் கட்சி புகார்களை காது கொடுத்து கேட்க தைரியம் இல்லாத இவர் , எதிர் கட்சி கூறும் குற்றசாட்டுகளை கேட்டு அதை திருத்தி கொள்ள மனமில்லாத இவர் எப்படி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்? வாய்ப்பே இல்லை. பாவம் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும்.

இவர் எப்படி சவால் விடுகிறார் என்று தெரிய வில்லை இடை தேர்தலில்  தனித்து போட்டி இட திராணி இருகிறதா என்று விஜயகாந்தை கேட்கிறார் ஆனால் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி இடுவேன் என்று கூற இவருக்கு திராணி இல்லையே ஏன்?

ஒரு இடை தேர்தலுக்கு 26 அமைச்சர்கள் தேவையா? இது எதை காட்டுகிறது என்றல் இவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது உண்மையில் இவர் நல்லாட்சி தான் செய்கிறார் என்றால் வேட்பாளரை அறிவித்து விட்டு இவர் மற்ற வேலையை பார்க்க வேண்டியது தானே மக்கள் இவர் ஓட்டு போடுவார்களே அப்பறம் எதற்கு இந்த 26 அமைச்சர்கள்.


அப்ப உங்களுக்கே தெரியுது நீங்க தேற மாட்டிங்கனு அப்பறம் ஏன் இந்த வீராப்பு.


தகுதி இல்லாதவர்களை கிடைத்த பதவி பற்றி ஜெயலலிதா சொன்னால் சரியாக தான் இருக்கும் ஏன் என்றால் அவரே ஒரு தகுதி இல்லாத நபர் முதல் அமைச்சர் பதவிக்கு.

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்போட உச்சத்தில மக்கள் இருக்காங்க இந்த லட்சணத்தில நீங்க நல்லாட்சி தருவதா வேற சொல்லுறிங்க இதுக்கு எல்லாம் பதில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்.

ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிகையில் வந்த கமெண்டுகளை பார்த்த தெரியும் ஜெயலலிதா தரும் நல்லாட்சியின் லட்சணம் !!!    

மக்கள் காத்துட்டு இருக்காங்க அடுத்த தேர்தலுக்கு அவங்களால அப்ப தான் பதில் சொல்ல முடியும்