கூடங்குளம் அணு உலையின் பயன் பற்றி ஒரு நாளிதளின் வெப்சைட்யில் ஒருவர் கொடுத்த கமெண்ட்டில் கீழ் கண்ட பகுதியை படித்தேன் அது உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன்
கூடங்குளம் அணு உலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை போக்குமா?
இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை( அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது )=1200mw.
இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540mw.ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்.
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்=405mw.
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு=305mw.
(பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை)
(பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை)
கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.
அணு உலை =13000 croress rs. runing cost 5000 crores.safeing 900 tone uranium 50000 years .
யு ரேனியம் 50000 வருடங்களுக்கு பாதுகாத்து வரலாம் ஆனால் பாதுகாக்கும் போது ஏதேனும் குறைபாட்டினால் அல்லது தனி மனித தவறினால் அல்லது இயற்கை சீற்றத்தால் விபத்து நடந்தால் ஏற்படும் இழப்பு எக்கசக்கம் .
யு ரேனியம் 50000 வருடங்களுக்கு பாதுகாத்து வரலாம் ஆனால் பாதுகாக்கும் போது ஏதேனும் குறைபாட்டினால் அல்லது தனி மனித தவறினால் அல்லது இயற்கை சீற்றத்தால் விபத்து நடந்தால் ஏற்படும் இழப்பு எக்கசக்கம் .
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw and more .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.
தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவு செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=2,625mw.இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.
காற்றாலை=700mw.தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).
உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்க பட்ட தளத்தில் படிக்கலாம்.
படிக்க இங்கே கிளிக் செய்யவும்
மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா
What you have return seems to be interesting. But some data given in the referred link looks like incorrect. Please check that.
ReplyDeleteSee assumptions in both options are different. If you even out the assumptions and do the math. Installed capacity is 4000. At 90% generation it is 3600. And allowing for 10% transmission loss and 50% of it being distributed to TN it means 1600 to TN. Do I make sense ?
ReplyDeleteHi Raja ... Keep writing more.. I love your writeup's. But I'm not good at writing in Tamil. Keep going.
ReplyDeleteSurely, I will try to write more Vish. Thanks for your support. From Nuclear power corporation of India Limited web site I came to know currently it will produce only 2000 Mws please go thru the below given link http://www.npcil.nic.in/main/ConstructionDetail.aspx?ReactorID=77.
ReplyDeleteAnd also I heard TamilNadu will get share of 30 to 40% so it will not help us.
Please share your thoughts on my other posts.
Thanks
Raja
Honestly, I did not do much research on this topic. I just understood the details from your write up. In general which I strongly agree is we should start doing the following.
ReplyDelete1. Conserve Electricity in all possible methods
2. Capitalize solar energy.
3. How to improve more productivity from the existing sources.
Currently the situation in TN is getting worse day by day. Sad about it.
Vish.