Search This Blog

Wednesday, February 8, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

கடந்த ஒரு வாரமா ஆபீஸ்ல நிறைய வேலை அதனால ஒரு போஸ்ட் கூட போட முடியல ஆனா இந்த ஒரு வாரதல ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து இருக்கு அதுல முக்கியமானது நம்ம கேப்டன் ரவுசு தான்.

சபாஷ் கேப்டன்.

நம்ம முதலமைச்சர் ஜெயலலிதா அடாவடி தனம் ஒலகம் அறிஞ்சது அவங்களுக்கு எல்லாம் அடாவடி தனமா பதில் சொல்லணும் அது தான் முறை. என்னை கேட்ட விஜயகாந்த் சட்ட சபைல நடந்து  கிட்டது தப்புனு சொல்ல மாட்டேன் ஏன்னா ஜெயலலிதாவும் சரி அவுங்க எம் எல் எ களும் சரி நடந்து கிட்ட முறை கொஞ்சம் கூட சரி இல்ல அவங்களுக்கு அப்படி தான் பதில் சொல்லணும். சபாஷ் கேப்டன் உங்க கிட்ட நாங்க நிறைய எதிர்பாக்கறோம்.



அடுத்தது ஜெயலலிதா சொல்லராங்க சட்ட சபையில் விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரி இல்லை . இதை தான் சாத்தான் வேடம் ஓதுதுன்னு சொல்லுவாங்க.. இவர் ஜானகி அம்மாள் முதலமைச்சராக இருந்த போது சட்ட சபையில் நடந்து கொண்ட முறை உலக அறிஞ்ச ஒன்று.. சட்ட சபையில் சென்ன ரெட்டி பற்றி இவர் கூறிய புகார் உலகம் அறிஞ்ச காமெடி.. தாமரை கனியை வைத்து இவர் சபையில் கொடுத்த பஞ்சுகள் ஏராளம்.

முதலில் இவர் கற்று கொள்ள வேண்டும் சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் கட்சி புகார்களை காது கொடுத்து கேட்க தைரியம் இல்லாத இவர் , எதிர் கட்சி கூறும் குற்றசாட்டுகளை கேட்டு அதை திருத்தி கொள்ள மனமில்லாத இவர் எப்படி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்? வாய்ப்பே இல்லை. பாவம் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும்.

இவர் எப்படி சவால் விடுகிறார் என்று தெரிய வில்லை இடை தேர்தலில்  தனித்து போட்டி இட திராணி இருகிறதா என்று விஜயகாந்தை கேட்கிறார் ஆனால் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி இடுவேன் என்று கூற இவருக்கு திராணி இல்லையே ஏன்?

ஒரு இடை தேர்தலுக்கு 26 அமைச்சர்கள் தேவையா? இது எதை காட்டுகிறது என்றல் இவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது உண்மையில் இவர் நல்லாட்சி தான் செய்கிறார் என்றால் வேட்பாளரை அறிவித்து விட்டு இவர் மற்ற வேலையை பார்க்க வேண்டியது தானே மக்கள் இவர் ஓட்டு போடுவார்களே அப்பறம் எதற்கு இந்த 26 அமைச்சர்கள்.


அப்ப உங்களுக்கே தெரியுது நீங்க தேற மாட்டிங்கனு அப்பறம் ஏன் இந்த வீராப்பு.


தகுதி இல்லாதவர்களை கிடைத்த பதவி பற்றி ஜெயலலிதா சொன்னால் சரியாக தான் இருக்கும் ஏன் என்றால் அவரே ஒரு தகுதி இல்லாத நபர் முதல் அமைச்சர் பதவிக்கு.

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்போட உச்சத்தில மக்கள் இருக்காங்க இந்த லட்சணத்தில நீங்க நல்லாட்சி தருவதா வேற சொல்லுறிங்க இதுக்கு எல்லாம் பதில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்.

ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிகையில் வந்த கமெண்டுகளை பார்த்த தெரியும் ஜெயலலிதா தரும் நல்லாட்சியின் லட்சணம் !!!    

மக்கள் காத்துட்டு இருக்காங்க அடுத்த தேர்தலுக்கு அவங்களால அப்ப தான் பதில் சொல்ல முடியும்













  

2 comments:

  1. One thing ...I perceive this guy has guts to stand opposite to Thalaivi. But he is not a matured guy to run the government for sure. Stalin is the pretty closer candidate for better administration.

    ReplyDelete
  2. Agreed he is not matured to run a government..

    ReplyDelete