Search This Blog

Thursday, September 13, 2012

கூடங்குளம் அணுஉலை விவகாரம்





கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்..!


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழி நடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத் துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்தடைக்கு இவர்கள் தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்று விட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன் பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்ட

தமிழகமே மின்வெட்டு இருளிலிருந்து மீண்டுவிடும் என்பது போலவும் ஒரு "மூட நம்பிக்கை" நிலவிக் கொண்டிருக்கிறது.

அனைவரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கும், கூடங்குளம் போராட்டங்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. இது இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிறிதும் பெரிதுமாக நடைபெற்று வரும் ஒரு நெடிய போராட்டமாகும். கடந்த ஒரு வருடமாக இப்போராட்டம் மக்கள் எழுச்சிமிகு தொடர் போராட்டமாக மாறியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்...?

வாழ்வுரிமை

கூடங்குளம் அணு உலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் 35 ஆயிரம் மக்களும், 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு லட்சம் மக்களும் வாழ்கிறார்கள். அம்மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது தென்தமிழகம், கேரளா மற்றும் அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் அணுஉலை அமைக்கப்பட்டால், அதன் ஆபத்துகளை அறிந்தபிறகு அதை நாம் அனுமதிப்போமா...? எதிர்ப்போமா....? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஜப்பானும், இந்தியாவும்

ஜப்பானில் கடந்த 11.03.2011 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் "புகுஷிமா அணு உலை" பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஜப்பானாலேயே இதைத் தடுக்க முடியவில்லை. சுமார் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் இறந்திருக்கலாம் என்றும், அதை ஜப்பானிய அரசு மறைப்பதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. அணுஉலை கசிவை, விபத்தை ஜப்பான் போன்ற வளர்ந்த - வல்லமை மிக்க நாடுகளாலேயே தடுக்க முடியவில்லை எனில், இந்தியா போன்ற தேசங்களால் என்ன செய்ய முடியும்...? தானே புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முதலுதவி செய்யவே நமக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது. அணு உலை வெடித்தால், நமது அரசின் மீட்பு நிலை எப்படி இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

14000 கோடியா...? உயிர்களா...?

14000 கோடிகளை முதலீடு செய்து அணுஉலை கட்டிய பிறகு, இப்போது அதை எதிர்ப்பது நியாயமா..? என சிலர் கேட்கிறார்கள். இந்த அணுஉலை அமைக்கப்பட்ட 1980களில் இதுகுறித்த விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. நம் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போகிறது, நமக்கெல்லாம் வேலைகளும், சலுகைகளும் கிடைக்கப் போகிறது என அரசின் ஏமாற்று பிரச்சாரங்களை அம்மக்கள் நம்பியிருந்தனர்.

இதுகுறித்து உதயகுமார் உள்ளிட்ட பலர் அப்போது எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த போது அதை அம்மக்கள் எதிர்த்தனர். ஜப்பான் - புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகே அப்பகுதி மக்கள் தங்களுக்கு நேரப்போகும் அபாயங்களை உணர்ந்தனர். அதன்பிறகே கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். உதயகுமார், புஷ்பராயன், ஏசுராஜ் போன்ற வழி நடத்தும் போராளிகளே தடுத்தாலும், அம்மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்பதே உண்மை.

14000 கோடி ரூபாய் வீணாகிறதே... என கவலைப்படும் "நல்லவர்கள் - தேசபக்தர்கள்" ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு மணமகனை நிச்சயம் செய்து, திருமணம் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். திருமணம் நெருங்கும் தருணத்தில், மணமகனுக்கு "எய்ட்ஸ் நோய்" இருப்பதாகத் தெரியவருகிறது. அப்போது நிச்சயத்தை காரணம் காட்டி திருமணத்தை நடத்துவீர்களா...? அல்லது ரத்து செய்வீர்களா...? இதற்கு நீங்கள் தரும் பதில் தான் கூடங்குளம் போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கும் பொருந்தும்.


அணுஉலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்குமா...?

இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் நிலையங்களிலிருந்து 65.10 சதவீதமும், புனல் மின் நிலையங்களிலிருந்து 21.22 சதவீதமும், சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், அணுஉலைகளிருந்து மொத்தமே 2.36 சதவீத மின்சாரத்தை மட்டுமே பெறப்படுகிறது.

கூடங்குளத்தில் அணு உலை இயக்கப்பட்டால் மொத்தமாக 15 நிமிடங்களுக்குத் தேவையான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த உண்மைகளை மத்திய மாநில அரசுகள் மறைக்கின்றன.

மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுஉலைகளுக்கு பதிலாக கடல் அலை, நதிகள், அருவிகள், காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இயற்கை துறைகளிலிருந்தும் - தொழில்நுட்பங்களிலிருந்தும் தயாரிக்க முடியும். அதை அரசு ஏன் செய்ய மறுக்கிறது...?

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளான ஜெர்மனி போன்ற பல நாடுகள் கூடங்குளத்தில் இருப்பது போன்ற அணுஉலைகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும், ஜப்பானும் புதிதாக அணு உலைகளை தங்கள் நாடுகளில் நிறுவ தடை விதித்துவிட்டன.

உலக யுரேனியத்தில் 23 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது நாட்டில் இதுவரை ஒரு அணுஉலையைக் கூட கட்டவில்லை. தற்போது ரஷ்யாவின் துணையோடு கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை என்பது வி.வி.ஐ.ஆர். வகையைச் சார்ந்ததாகும். இந்த வகை அணுஉலைகள் கடற்கரைப் பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்டதில்லை. ரஷ்ய பொறியாளர்களுக்கு இதில் முன் அனுபவமும் இல்லை. அதை விட கவனிக்கத்தக்கது, இந்த வகை அணுஉலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல் முறையாக கடல் நீரைக் கொண்டு பரிசோதிக்க இருக்கின்றன.

நாம் கேட்பது என்னவெனில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்ன, பரிசோதனை எலிகளா...? உலகிலேயே இவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா...?

ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்த பிறகு, ரஷ்ய அணுஉலைகளின் தரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அக்குழு, "சக்தி வாய்ந்த புகுஷிமா ஜப்பானிய அணுஉலை விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வலிமை ரஷ்ய அணு உலைகளுக்கு இல்லை' என அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

ரஷ்யாவில் "செர்னோபிலில்' தான் 1986 ஜூன் மாதத்தில் கதிர்வீச்சு வெளியேறி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 9 முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட நூறு மடங்கு ஆபத்துகளை ஏற்படுத்தியது.

ரஷ்யாவின் துணையோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள், புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ள புவிக்கோட்டில் அமைந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.

தேசத்துரோகிகள் யார்....?
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலைகள் முதலில் கேரளாவில் தான் அமைக்க திட்டமிடப்பட்டன. கேரள அரசும், மக்களும் விழித்துக் கொண்டதால் அது தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளது.

"அணுஉலைகளை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்" என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.

மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் உள்ள சமூகப் பொறுப்புணர்வு தமிழர்களுக்கு இல்லையா...? உதயகுமார் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என்றால் கேரள, மேற்குவங்க அரசியல் தலைவர்கள் எல்லாம் யார்...?

அமெரிக்கா - ரஷ்யாவின் செல்லப் பிள்ளைகளான மன்மோகன் சிங்கும், மான்டேக் சிங் அலுவாலியாகவும் யார்...? மக்களுக்காகப் போராடும் உண்மையான தலைவர்களை எதிர்கால வரலாறு விளக்கத்தான் போகிறது.

அனைவரும் மதிக்கும் அப்துல் கலாம், கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறாரே...? எனலாம்.

அப்துல் கலாம் ஒரு அரசாங்க பிரதிநிதி. அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி தானே தவிர அணு விஞ்ஞானி அல்ல. அவரை நாமும் மதிக்கிறோம். ஆனால் தினமும் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவோ, தீண்டாமையால் அவதிப்படும் தலித்துகளுக்காகவோ, கலவரங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர்களுக்காகவோ என்றைக்காவது ஐயா அப்துல் கலாம் குரல் கொடுத்திருக்கிறாரா..? என்பதையும் கேள்விகளாக முன்வைக்கிறோம்.

காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை வரவேற்றவர்கள் கூட நேதாஜியின் நியாயங்களையும் ஏற்றார்கள் என்பதை "அறிவுஜீவிகள்' புரிந்துகொள்ள வேண்டும்.

அப்துல் கலாம் அவர்கள் இவ்விஷயத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் அரசு பக்கம் நிற்பது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது.

அணுமின் நிலையங்களின் உண்மை நிலை.

இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட அணுஉலைகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்தான் செலவுகள் பன்மடங்காகின்றன. இன்னும் பல புதிய அணுஉலைகளைக் கட்டினாலும், 2050ல் கூட அணுஉலைகளின் மூலம் 5 சதவீத மின்தேவையைக் கூட எட்ட முடியாது என்பதே உண்மை.

உண்மையில் அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா..? அல்லது மின்சாரம் என்ற பெயரில் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறதா...? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

மக்களே...!!! சிந்திப்பீர்...!!!

அணுஉலைகளில் கசிவு என்பது தவிர்க்கவே முடியாததாகும். அவற்றின் கழிவுகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அது சேதமடைந்தால் அணுகுண்டுகளினால் ஏற்படும் பேராபத்தை விட மோசமாக இருக்கும்.

அப்பகுதிகளில் கடல்நீர் பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும். உணவு, குடிநீர், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கெடும். புற்றுநோய் பரவுவது தவிர்க்க முடியாதது என்றெல்லாம் உலக அனுபவங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.

1984ல் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் "யூனியன் கார்பைட்' என்ற அமெரிக்க நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததையும், இன்றுவரை அங்கு குழந்தைகள் ஊனமுற்றும், புற்றுநோயோடும் பிறப்பதையும் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகள் இல்லை. இந்திய அரசு நம் மக்களை மறந்து விட்டு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக இன்று வரை செயல்படுவதைப் பார்த்த பிறகும், நீங்கள் கூடங்குளம் போராட்டத்தை எதிர்த்தால் அது உங்கள் மனசாட்சியைக் கொல்வதாகவே இருக்கும்.

நமக்கு மின்சாரம் வேண்டும்...! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்...!

Tuesday, July 24, 2012

தெரிந்து கொள்ளுங்கள்

பூலித்தேவன் !


பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். “தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?” என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப், மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.

எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை, பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்த கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.


                                   

திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதர் அலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.

வெள்ளையரின் துப்பாக்கிப் படைகளை முறியடித்த பூலித்தேவனின் மரபு ரீதியான ஆயுதங்கள்
இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன், 1760 – 61ஆம் ஆண்டுகளில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.

அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.

பூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள், பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு, அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது.

Sunday, March 18, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

ஓர் ஆட்சி ஓர் இடை தேர்தல்

ஒரு ஆட்சியில் இடை தேர்தல் வருகிறது என்றல்  ஒரு நல  ஆட்சியாளர்களுக்கு   கொண்டாட்டமாக இருக்கும் ஏன் என்றால் அப்போது தான் மக்கள் தங்கள் ஆட்சிக்கு கொடுக்கும் நல் மதிப்பெண் என்னவென்று ஆட்சியாளர்களுக்கு தெரிய வரும்.

இப்படி எல்லாம் நம்ம ஆளுங்க நினைக்கராங்கானு தப்பு தப்பா நினைச்சிடாதிங்க ஏன்ணா நம்ம ஆளுங்க அதை ஒரு கவுர பிரச்சனையா தான் நினைக்கறாங்க இல்லனா ஒரு இடை தேர்தலுக்கு 32 அமைச்சர்கள், 154 எம் எல் எ க்கள்,  30க்கும் மேற்பட்ட மாவட்ட செயலளர்கள்,வட்டம், ஒன்றியம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாம் சேர்த்த ஒரு ஆயிரம் பேருக்கு மேல வரும் இது ஆளும் கட்சி இது போல எதிர் கட்சி, தி மூ க அப்புறம் ம தி மூ க இவங்க எல்லாம் சேர்த்த ஒரு ஐயாயிரம் பேரு இருப்பாங்க எல்லாம் எதுக்கு ஒரு இடை தேர்தலுக்காக.


உண்மையில் ஒரு நல்ல கட்சி என்ன பண்ணனும் ஆளும் கட்சியா இருந்த வேட்பாளார அறிவிச்சிட்டு அவங்கள வேலைய பார்க்க சொல்லிவிட்டு இவங்க மக்கள் பணியை தானே செய்யணும். ஆனா என்ன நடக்குது இவங்க மக்கள் பணியை செய்யல அதை விட்டுட்டு ஒரு இடை தேர்தலுக்கு இவ்வளவு  ஆர்ப்பாட்டம் தேவையா ?

தானே புயல் வந்து பாதிக்க பட்ட கூட இவ்வளவு பேரு ஜெயலலிதா அனுப்பி வைக்கல இப்படி அனுப்பி இருந்த சீக்கிரம் கடலூர் மக்கள் புயல் பாதிப்புல  இருந்து மீண்டு இருப்பாங்க ஆனா ஜெயலலிதாவிற்கு அது கவுர கொறைச்சலா தெரியல இது.

வர மே மாதம் வந்த அ தி மு க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது.
பேருந்து கட்டணம் உயர்வு, மக்கள் உபயோக பொருட்கள் விலை உயர்வு,தானே புயல் நிவாரண பாதிப்பு மற்றும் மின்சார பிரச்னை இவ்வளவு பிரச்சனை இருக்கு ஆனா ஜெயலலிதாவிற்கு பழி வாங்கவே நேரம் சரியாய் இருக்கு.

ஜெயலலிதா இந்த இடை தேர்தலை சந்திக்க பயப்படுகிறார் எனேன்றால்
ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிகை இல்லை. இது எதை காட்டுகிறது என்றால் அவர்களின் திராணி குறைந்து விட்டதை!!! அவர் எந்த தைரியத்தில் சவால் விட்டார் என்று தெரிய வில்லை ஒரு வேளை   அவர்கள் ஆளும் கட்சி என்ற தைரியதிலோ?


ஆனால் உண்மையில் மக்கள் அவர் மீது வைத்த நம்பிகையை கெடுத்து விட்டார் என்பது உண்மை. பணம் குடுத்து, ஆளும் கட்சி என்ற அதிகாரம் கொண்டு, அதிகார துஷ் பிரயோகத்தால் பெரும் வெற்றி உண்மையான வெற்றி இல்லை என்பது தான் உண்மை.


ஒரு விடியல்:


உண்மையில் வை.கோ தமிழக அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை தான் உருவாக்கிறார்.  பண பலம் ,ஆட்பலம், அதிகார பலம் என்று கொண்ட கட்சிளுக்கு மத்தியில் உண்மையான தொண்டர்களை கொண்டு தன் கொள்கைகளை மட்டும் கொண்டு ஒட்டு வேட்டையாடி வருகிறார்.

இந்த தேர்தலில் இவர் கட்சி தோற்றால் கூட அது தோல்வி இல்லை இவர் பெறும் ஒவ்வெரு வாக்கும் இவரின் கட்சின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் நம்பிக்கை விதைகள்.

தலைமை என்னதான் நல்லா இருந்தாலும் அடிமட்ட தொண்டன் வரை எல்லாரும் நல்லா இருந்த தான் கட்சி வளர்ச்சியடையும்.
எனக்கு தெரிந்த ஒரு ம தி மு க தொண்டர் சாதாரன கவுன்சிலரா தன் அரசியல் வாழ்கைய ஆரம்பிச்சார் இன்னைக்கு அவர் ஒரு பஞ்சாயத்தின் துணை தலைவர் வரை வளர்ந்து உள்ளார்.

இது பாரட்ட வேண்டிய விஷயம் தான் ஒழுங்காக வந்து இருந்தால் ஆனால் வளர்ந்த விதமே வேறு. நாளை ஒரு வேலை ம தி மு க ஆட்சிக்கு வந்தால் அவர் கட்சியினர் இந்த மாதிரி ஊழல் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

வை கோ இப்போதே கட்சியில் களை எடுத்தால் கட்சிக்கு நல்லது.

சபாஷ் சச்சின்:

தனது சதத்தில் நூறாவது சதத்தை அடைந்து விட்டார். அவர் மென்மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஆண்டவனை பிராதிப்போம்.


சச்சின் சதம் அடித்து இந்திய அணி தோற்று விட்டால் சிலர் சச்சினை குறை சொல்லுவது ஏன் என்று தெரியவில்லை. போன மட்ச்ல சச்சின் சதம் அடித்தும் இந்திய அணி தோற்று விட்டது கேட்டால் நாம் 20 குறைவாக எடுத்து விட்டோம் என்று அது சச்சினால தான் நாம் எடுக்க முடியாம போய் விட்டது சொல்லுறாங்க.


ஆனா உண்மையில் என்ன நடந்ததுனா நம்ம பௌலர்கள் நல்லா பௌலிங் போடலை அதனால தான் நாம் தோத்தோம்.


இத்தனைக்கும் பங்களாதேஷ் பாகிஸ்தான் கிட்ட இத வீட கம்மியான ஸ்கோர் எடுக்க முடியாம தோத்துட்டாங்க. பாகிஸ்தான் எடுத்தது 262  நாம எடுத்தது 289 பங்களாதேஷ் நம்ம ஸ்கோர் சேஸ் பண்ணி எடுத்துட்டாங்க ஆனா பாகிஸ்தான் கிட்ட தோத்துட்டாங்க இதை கேட்ட எவனும் பதில்  சொல்ல மாட்டாங்க.

ஒன்னு மட்டும் நிச்சயம் நாம 500௦ ரன் அடிச்சா கூட தோத்துடுவோம் ஏன்னா நம்ம பௌலிங் அவ்வளவு ஸ்ட்ரோங்!!!

நண்பர் ஒரு அறிமுகம்:

Hi Raja ... Keep writing more.. I love your writeup's. But I'm not good at writing in Tamil. Keep going.

இப்படி சொன்னது நமது நண்பர் Vish முழு பேர் தெரியல இது நமது நண்பரின் முதல் கமெண்ட் அதுக்கு அப்பறம் நிறைய கமெண்ட் போட்டு இருக்கிறார் இவரின் கமெண்ட் தான் என்னை உற்சாகபடுத்தி, ஊக்கபடுத்தி  உள்ளது. 
நன்றி Vish .   

பாராட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் கமெண்ட் முலம் நான் அறிந்து கொண்டேன். ஏனெனில் வேலை பளுவின் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை ஆனால் உங்கள் பாராட்டு என்னை தொடர வைத்துள்ளது மீண்டும் நன்றி.

ஒரு வாரம் நண்பனுடன் வட நாட்டிற்கு செல்கிறேன் ஆகையால் ஒரு வாரத்திற்கு நமது நண்பர்களை சந்திக்க முடியாது.

அன்புடன் 
ராஜா
       

Saturday, March 17, 2012

இந்தியராக இருக்க விடுங்கள் - தமிழருவி மணியன்

இந்த கட்டுரை ஜூனியர் விகடனில் படித்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது அதனால் உங்களுக்காக









 

Monday, March 12, 2012

என்ன செய்ய போகிறோம் நாம் ?


நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம் ஆனால் அதை பற்றி நாம் எல்லோரும் உணர்ந்தோமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நாம் நாம் என்று குறிப்பிடுவது தமிழர்களை. 

சரி தமிழர்கள் என்ன முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்று நினைகின்றீர்களா? அது ஒன்றும் இல்லை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய ஆதரிக்க வேண்டும் அதற்கு நாம் ஒரு குரலில் குரல் கொடுத்து இந்திய அரசை ஆதரிக்க வைக்க வேண்டும்.

நாம் இப்போது இந்த வாய்ப்பை தவற விட்டால் பின் எப்போதும் இலங்கை தண்டிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்காது.

உண்மையில் இப்போது என்ன நடந்து இருக்க வேண்டும். நாம் நம் மக்களுடன் வீதியில் இறங்கி இருக்க வேண்டும் ஏன் என்றால் இன்னும் இந்திய அரசு தீர்மானத்தை பற்றி வெளிப்டையாக ஒரு கருத்தும் கூறவில்லை இப்போது இந்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வில்லை என்றால் பின் எப்போதும் இலங்கையை போர் குற்றத்திற்கு தண்டிக்க முடியாமல் போய்விடுமோ என்று அச்ச படுகிறேன்.

இந்திய அரசு பல முறை இந்த மாதிரி தமிழர்களுக்கு எதிரான பிரச்சனையில் காலை வாரி உள்ளது  அதனால் நாம் இப்பொழுது விழித்து எழுந்து வீதியில் இறங்கி போராடி இந்திய அரசை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வைக்க வேண்டும்.

சேனல் 4 இருக்கும் அக்கரையில் நான்கில் 1 பங்கு இருக்குமா என்பது சந்தேகமே? உண்மையில் நாம் எப்போதே பொங்கி இருக்க வேண்டும் ஆனால் நாம் நம் உணர்வுகளை விற்று விட்டோமோ என்று தோன்றுகிறது.

கீழ் காணும் வீடியோ காட்சிகளை காணும் போது கல் நெஞ்சமும் கரைந்து போகும் ஆனால் நம் நெஞ்சம் கரையவில்லை இவர்களுக்காக குரல் குடுக்க மனம் வரவில்லை என்பதே வேதனை. 





இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்து இருக்கிறார்கள். 

இவர்களுக்கு தண்டனை வேண்டாமா? இவர்களும் ஒரு வகையில் நம் உறவுகள் தான் அதை நாம் ஏன் உணர மறுக்கிறோம் என்று தெரியவில்லை.  

இப்போது பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ வெளியிட போகிறதாம்  சேனல் 4! மிக மிக நெருக்கத்தில் வைத்து பாலச்சந்திரனை சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் இலங்கை வீரர்கள்.
அது மட்டுமில்லாமல் சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் உள்ளதாம். 



இந்த குற்றவாளிகளுக்கு நாம் இப்பொழுது தண்டனை வாங்கி தராவிட்டால் இந்த உலகம் உள்ள வரை தமிழர்களை  தூற்றும்  இந்த போர் குற்றவாளிகளுக்கும் நமக்கும் வேற்றுமை இல்லை என்று தூற்றும்.
 
வீழ்வது இழிவாகாவது வீழ்ந்து கிடப்பது இழிவு அதனால் இப்பொழுது நம் ஒற்றுமையை காட்ட தவறி விட்டால் பின் எப்பொழுதும் எந்த பிரச்சனைகளுக்கும் இந்திய அரசு நமக்கு துணை இருக்காது இதை நாம் உணர வேண்டும்.

தயவு செய்து சொல்லுங்கள் என்ன செய்ய போகிறோம் நாம்?    


Friday, February 10, 2012

நாம் ஏமாறப்போகின்றோமா?

கூடங்குளம் அணு உலையின் பயன் பற்றி ஒரு நாளிதளின்  வெப்சைட்யில் ஒருவர் கொடுத்த கமெண்ட்டில் கீழ் கண்ட பகுதியை படித்தேன் அது உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன் 

கூடங்குளம் அணு உலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை போக்குமா? 

கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 21000=2000mw. அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும்=1200mw. எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது.

இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.

ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை( அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது )=1200mw.

இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540mw.ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்=405mw.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.

இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு=305mw.
(பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை) 

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். 

அணு உலை =13000 croress rs. runing cost 5000 crores.safeing 900 tone uranium 50000 years . 


யு ரேனியம் 50000 வருடங்களுக்கு பாதுகாத்து வரலாம் ஆனால் பாதுகாக்கும் போது ஏதேனும் குறைபாட்டினால் அல்லது தனி மனித தவறினால் அல்லது இயற்கை சீற்றத்தால் விபத்து நடந்தால் ஏற்படும் இழப்பு எக்கசக்கம் . 

மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw and more .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவு  செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=2,625mw.இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

காற்றாலை=700mw.தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).

உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).

வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.

மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்க பட்ட தளத்தில் படிக்கலாம். 

படிக்க இங்கே  கிளிக் செய்யவும் 


வெகு சிலர் தான் அணு உலை திட்டத்தால் நன்மை ஏதும் இல்லை என்று கூறுவார்கள் . இதை ஏற்பதற்கு பலர் தயாராக இருக்க மாட்டார்கள். பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு ஏற்ப அனுபவித்து தெரிந்து கொள்வர். "அவசர தேவைக்கு உடனடி மின்சாரம் " என்ற மாயை அவர்களின் கண்களை மறைத்து வைத்து இருக்கிறது அதனால் எவ்வளவோ எடுத்துக்கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் . இப்படி இருந்தால் எப்படி இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்க முடியும். தவறான எண்ணம் இருக்ககூடாதுதான் எனினும் அணு உலை விபத்து என்று ஒன்று வரவேண்டும். அப்போதுதான் "அணு உலை வேண்டும் " என்று கூக்குரலிடுபவர்களுக்கு அதன் தாக்கம் புரியும்.


மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா

Wednesday, February 8, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

கடந்த ஒரு வாரமா ஆபீஸ்ல நிறைய வேலை அதனால ஒரு போஸ்ட் கூட போட முடியல ஆனா இந்த ஒரு வாரதல ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து இருக்கு அதுல முக்கியமானது நம்ம கேப்டன் ரவுசு தான்.

சபாஷ் கேப்டன்.

நம்ம முதலமைச்சர் ஜெயலலிதா அடாவடி தனம் ஒலகம் அறிஞ்சது அவங்களுக்கு எல்லாம் அடாவடி தனமா பதில் சொல்லணும் அது தான் முறை. என்னை கேட்ட விஜயகாந்த் சட்ட சபைல நடந்து  கிட்டது தப்புனு சொல்ல மாட்டேன் ஏன்னா ஜெயலலிதாவும் சரி அவுங்க எம் எல் எ களும் சரி நடந்து கிட்ட முறை கொஞ்சம் கூட சரி இல்ல அவங்களுக்கு அப்படி தான் பதில் சொல்லணும். சபாஷ் கேப்டன் உங்க கிட்ட நாங்க நிறைய எதிர்பாக்கறோம்.



அடுத்தது ஜெயலலிதா சொல்லராங்க சட்ட சபையில் விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரி இல்லை . இதை தான் சாத்தான் வேடம் ஓதுதுன்னு சொல்லுவாங்க.. இவர் ஜானகி அம்மாள் முதலமைச்சராக இருந்த போது சட்ட சபையில் நடந்து கொண்ட முறை உலக அறிஞ்ச ஒன்று.. சட்ட சபையில் சென்ன ரெட்டி பற்றி இவர் கூறிய புகார் உலகம் அறிஞ்ச காமெடி.. தாமரை கனியை வைத்து இவர் சபையில் கொடுத்த பஞ்சுகள் ஏராளம்.

முதலில் இவர் கற்று கொள்ள வேண்டும் சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் கட்சி புகார்களை காது கொடுத்து கேட்க தைரியம் இல்லாத இவர் , எதிர் கட்சி கூறும் குற்றசாட்டுகளை கேட்டு அதை திருத்தி கொள்ள மனமில்லாத இவர் எப்படி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்? வாய்ப்பே இல்லை. பாவம் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும்.

இவர் எப்படி சவால் விடுகிறார் என்று தெரிய வில்லை இடை தேர்தலில்  தனித்து போட்டி இட திராணி இருகிறதா என்று விஜயகாந்தை கேட்கிறார் ஆனால் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி இடுவேன் என்று கூற இவருக்கு திராணி இல்லையே ஏன்?

ஒரு இடை தேர்தலுக்கு 26 அமைச்சர்கள் தேவையா? இது எதை காட்டுகிறது என்றல் இவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது உண்மையில் இவர் நல்லாட்சி தான் செய்கிறார் என்றால் வேட்பாளரை அறிவித்து விட்டு இவர் மற்ற வேலையை பார்க்க வேண்டியது தானே மக்கள் இவர் ஓட்டு போடுவார்களே அப்பறம் எதற்கு இந்த 26 அமைச்சர்கள்.


அப்ப உங்களுக்கே தெரியுது நீங்க தேற மாட்டிங்கனு அப்பறம் ஏன் இந்த வீராப்பு.


தகுதி இல்லாதவர்களை கிடைத்த பதவி பற்றி ஜெயலலிதா சொன்னால் சரியாக தான் இருக்கும் ஏன் என்றால் அவரே ஒரு தகுதி இல்லாத நபர் முதல் அமைச்சர் பதவிக்கு.

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்போட உச்சத்தில மக்கள் இருக்காங்க இந்த லட்சணத்தில நீங்க நல்லாட்சி தருவதா வேற சொல்லுறிங்க இதுக்கு எல்லாம் பதில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்.

ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிகையில் வந்த கமெண்டுகளை பார்த்த தெரியும் ஜெயலலிதா தரும் நல்லாட்சியின் லட்சணம் !!!    

மக்கள் காத்துட்டு இருக்காங்க அடுத்த தேர்தலுக்கு அவங்களால அப்ப தான் பதில் சொல்ல முடியும்