போன வருடம் நான் கனவு கூட காணவில்லை நான் ஒரு BLOG ஆரம்பிப்பேன் என்று அதில் நான் விரும்பும், நேசிக்கும் இந்த உயர்ந்த, வாழும் சகாப்த்தை பற்றி ஒரு பதிவு போடுவேன் என்று நினைக்கவே இல்லை.
இந்த மனிதரிடம் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றும் சொல்ல தெரியவில்லை ஆனால் அவரிடம் என்னமோ ஓர் ஈர்ப்பு இருக்கிறது .
அவர் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அல்லது ஏதாவது பத்திரிகையில் அவரை பற்றி படிக்கச் நேரிட்டால் மனதில் ஒரு உற்சாகம் தோன்றுவதை மறுக்க முடியாது.
அவர் பெயரை திரையில் பார்க்கும் பொழுது மனதில் உற்சாகம் பொங்கி உற்சாகத்தில் "தலைவா... " என்று கத்துவதை தவிர்க்க முடியாது.
அவர்தான் தமிழ் திரையுலக "தங்கமகன்"
தமிழக மக்களுக்கு கிடைத்த "முத்து"
இந்திய திரையுலக BOX OFFICE "பாட்ஷா"
என்னை போன்ற பல லட்ச ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் "மன்னன்".
எங்கள் SUPER STAR ரஜினி அவர்கள்தான்.
இவர் ஒரு சகாப்தம், சாதனை மனிதர் இவரை பற்றி பாராட்டாத பத்திரிகை இல்லை , இவர் புகழ் பாடாத தொலைக்காட்சி இல்லை, இவர் பெயரை பயன்படுத்தி சம்பதிகாதவர்கள் இல்லை சமிபத்திய உதாரணம் "ரா-ஒன்" இவர் நடிக்காத அந்த திரைபடத்தில் நடித்தாக விளம்பரபடுத்தியத்தை பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு அதை அனுமதித்தார்.
அவரை பற்றி எவ்வளவோ பேர் புகழ்ந்து பாராட்டி இருப்பார்கள். அவர் அணியாத புகழ் மாலை இல்லை நான் ஒன்றும் புதியதாக புகழ போவதும் இல்லை சொல்ல போவதும் இல்லை ஒரு ஏழை ரசிகனின் எளிய வாழ்த்தை இந்த பதிவில் பதிவு செய்கிறேன்.
அவரை போன்ற எளிய மனிதனை இனிமேல் பார்க்க முடியாம என்பதே ஒரு கேள்விகுறி ? அவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்தவர்களும், அவர் பெயரை பயன்படுத்தி பலன் பெற்றவர்கள் உண்டு பின்பு அவர் காலை வாரி விடத்துணிந்தவர்களும் உண்டு.
அவரை பார்த்து பொறமை பட்ட நடிகர்களும் உண்டு அவரை எதிர்த்த நடிகர்களும் உண்டு ஆனால் அவர்களை எல்லாம் தன்னிடம் இருந்த எளிய ஆயுதத்தால் வெற்றி கொண்டார்.
அந்த ஆயுதம் தன "மறப்போம் மன்னிப்போம்". அந்த அன்பினால் தன்னை எதிர்த்தவர்களை மட்டுமல்ல என்னை போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களையும் தன வசமாக்கி அவர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
இத்தகைய அன்பு மனிதர் உடல்நலக் குறைவால் மருத்துவமன்னையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானபோது இந்த தமிழ் நாடே பதறியது என்றல் மிகையாகாது. தன் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தது போல் அனைத்து ரசிகர்களும் துடிதுடித்தனர்.
அவர் சிகிச்சைகாக வெளிநாட்டிருக்கு செல்கிறார் என்றபோது தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான ரசிகர்கள் மட்டும்மில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நல்ல உள்ளங்கள் அவருக்க வேதனை அடைந்தது. அவர் நல்லபடியாக குணமாகி திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் பல லட்சகணக்கான மக்கள் வேண்டினர். வேண்டுதலும் பலித்து நல்லபடியாக நாடு திரும்பினார்.
அந்த இனிய மனிதர் திரும்புவதை காண எர்போர்டில் ஆயிரகணக்கான ரசிகர்களும், டிவியின் முன் பல லட்ச மக்கள் காத்து கிடந்தனர். அவர்கள் வேண்டுதலும், காத்திருத்தலும் ஆண்டவன் அருளால் வீண் போகவில்லை அவர் நல்ல படியாக நாடு திரும்பினார்.
இது நிறைய பேருக்கு பைதியகாரதனமாக இருக்கலாம் ஆனால் இது ஒரு தூய்மையான அன்பு. இந்த அன்பு எதையும் எதிர்பார்க்காத அன்பு.
அவர் பூமிக்கு வந்த இந்த நல்ல நாளில் அவர் மேன் மேலும் சிறந்து, பல அடைய முடியாத உயரங்களையும், நல்ல ஆரோக்கியமும், சந்தோசத்தையும் அந்த ஆண்டவன் தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன்.
அவர் என்றுமே இந்திய திரையுலக முடிசூடா மன்னன்.
One and Only superstar for Tamil cinema |
Happy Birthday Super Star