வாழ்கையில் எத்தனையோ பேரை தினம் தினம் சந்திக்கிறோம், பழகுகிறோம், சேர்ந்து பொழுதை கழிக்கிறோம், ஏன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை கூட வேலை பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாம் திரும்பி பார்த்தல் நம்முடன் பழகிய அதனை பேரையும் ஞாபகத்துல வச்சிக்க மாட்டோம் ஒரு குறிப்பிட்ட சில பேர் மட்டுமே நாம் நினைவில் இருப்பர். நாம் கஷ்டபடும் போது, சந்தோஷபடும்போது அந்த சிலரை மிஸ் பண்ணுவோம். அப்படி தங்களை ஒருவற்கு ஒருவர் மிஸ் பண்ணும் மூன்று நண்பர்களை பற்றிய கதை தான் நண்பன்.
ஒரு படத்தை பார்க்கும் போது நம்மை அந்த படத்துல ஒன்றி போய் பார்க்க செய்தால் அதுவே அந்த படத்தின் வெற்றி. அந்த வகையில் நண்பன் படம் என்னை அவனுடன் ஒன்றி போக செய்து என்னை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டது
படத்தில் காட்டப்படும் நான்கு மாணவ கதாபாத்திரங்கள் நம்முடைய கல்லுரி காலத்தில் நிறைய பார்த்து இருப்போம் குறிப்பாக அந்த சத்யன் பன்ன ஸ்ரீ வத்ஷவ் கேரக்டர் இன்று நம்மிடையே நிறைய பேர் உள்ளனர். அந்த கேரக்டர் ஒரு சுயநலவாதி தான் முன்னேறுவதற்காக மற்றவர்களை முன்னேற விடாமல் கெடுத்து தான் முன்னேற நினைக்கும் கேரக்டர் அதே போல் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் பச்சோந்திதனமான கேரக்டர். சத்யன் மிக சிறப்பா செய்து இருக்கிறார் அவருடைய பாடி லாங்குவேஜ் எல்லாம் சிறப்பா இருக்கும் கண்டிப்பா இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக் தான் ஆனா இதுக்கு அப்பறம் எப்படி எடுத்து போக போறாரு பொறுத்து தான் அவருடைய career இருக்கு.
இன்றைய நடைமுறை வாழ்கையில் நிறைய பேர் போட்டி போட்டு முன்னேறுவதில்லை ஒன்று நன்றாக ஜால்ரா அடித்து அல்லது மற்றவர்களின் முன்னேறத்திற்கு முட்டுக்கட்டை போட்டு தான் முன்னேறுகின்றனர் இது போன்ற கேரக்டர் தான் சத்யனுடையது இதை படத்தில் சத்யன் examku தயாராகும் முறையை வைத்து புரிய வைத்து இருப்பர் டைரக்டர்.
ஜீவா செய்த சேவற்கொடி செந்தில் கேரக்டர் நம்மில் பல பேரிடம் காணலாம். அது பயம், தைரியமின்மை அந்த கேரக்டரை அற்புதமாக செய்து இருப்பார். படத்தில் அந்த கேரக்டரை பார்க்கும் போது நான் கல்லூரி காலங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயந்தது, தயங்கியது மற்றும் சில விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.
கல்லூரி நாட்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம் வித்தியாசமான, பிரபலமான மாணவன் கூட ஒரு ப்ரெண்டு இருப்பான் அவர்களிடையே ஓர் ஆரோக்கியமான அத்மார்தனமான நட்பு இருக்கும் அது போல் ஓர் நண்பனாக ஸ்ரீ காந்த் செய்து இருப்பர். வெங்கட் என்ற அந்த கேரக்டர் மிக நன்றாக இருந்தது.
விஜய் பண்ணிய பாரி என்ற அந்த கேரக்டர் மிக சிறந்த பாத்திர படைப்பு இந்த மாதிரியான நண்பன் நம் நட்பு வட்டத்தில் உண்டு. அவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும் எதிர் மறையாக பேச மாட்டார்கள் ஆனால் இந்த படத்தில் காட்டியதை போன்று அந்த நண்பர்கள் எல்லா விஷயத்திலும் சிறந்தவராக இருப்பது மிக சிலர்தான்.
படத்தோட மற்றொரு முக்கிய பலம் சத்யராஜ் பண்ணிய அந்த VIRUS கேரக்டர் தான் அவரை பார்க்கும் போது என் கல்லூரி பேரசிரியர் "ஆரோக்கியராஜ்" சார் தான் ஆனா VIRUS மாதிரி இல்ல ஓரளவு கண்டிப்பான ஆசிரியர். இன்று நான் பணிபுரியும் வேலைக்கான தன்னம்பிகை விதையை அவர்தான் விதைத்தார். உண்மையில் சத்யராஜை தவிர அந்த கேரக்டரை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக தமிழில் செய்ய முடியாது.
இந்த படம் என்னை மிக பிடிக்க காரணமே படத்தின் சில சம்பவங்கள் என்னுடைய கல்லூரி மற்றும் அதை சார்ந்த நாட்களுக்கு கொண்டு சென்றது.
உதாரணத்திற்கு இலியானாவின் அறிமுக காட்சி மூன்று நண்பர்களும் திருட்டுதனமா கல்யாண விருந்திற்கு செல்லும் காட்சி. நான் எனது நண்பர்களுடன் வேறு ஊர்க்கு சென்று அறிமுகமில்ல, யாரென்று தெரியாத திருமணத்திற்கு சென்று வயிறு நிறம்ப சாபிட்டோம் நல்ல வேளை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
நம்முடைய தேவை தான் பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையே படத்தில் கல்யாண காட்சியில் கார் பாட்டரி வைத்து inverter உருவாக்குவதை பற்றி கூறி இருப்பார் அந்த ஐடியாவிற்கு மற்றொரு காட்சில் வடிவம் கொடுத்து இறுதியில் அதனை பிரசவ காட்சியில் கொண்டு வண்டு சேர்த்தது கதாசிரியரின் திறமை.
படத்துல பாரட்ட வேண்டிய விஷயம் கேமரா ஒரே வார்த்தைல சொல்லணுமுன "Superb".
பாடல்கள் சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே ஹிட் அஸ்க்கு அஸ்க்கு, நல்ல நண்பன் தேவை , கண் முன்னே போன்ற பாடல்கள் மனதை வருடும் ரகம். இருக்கான இடுப்பு இருக்கான பாடல் விஜய் ரசிகர்களுக்காக.
குறையென்று பார்த்தல் எல்லா படத்திலும் குறைகளை பார்க்கலாம் ஆனால் நல்ல படங்களில் அதை பெரிது படுத்த கூடாது அதனால் எனக்கு சொல்ல மனம் வரவில்லை.
மனதை நெகிழ செய்த காட்சிகள்
- ஸ்ரீ காந்த் தான் தந்தையிடம் பேசும் காட்சி.
- ஜீவாவின் interview காட்சி
- ஜீவாவின் தற்கொலை செய்ய முயன்று ஆஸ்பத்திரியில் இருக்கும் காட்சிகள்
- அனுசுயாவின் பிரசவ காட்சியில் சத்யராஜ் நடிப்பு
பிடித்த பாத்திரயமைப்பு :
விஜயின் கேரக்டர் சிறப்பாக செய்யபட்டிருக்கிறது . ஒரு காட்சியில் நண்பர்கள் விஜயின் காதலை இலியானாவிடம் அவர் காதலை தெரிவித்தால் தங்களை மாற்றி கொள்வதாக சொல்லுவார்கள். கதைப்படி அந்த கேரக்டர் தன் காதலை தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார் ஆனால் நண்பர்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக அவர் தன் காதலை தெரிவிப்பார் படத்தில் இந்த காட்சி இயல்பாக தான் தெரியும் கதைப்போக்கில் அந்த பத்திரத்தை பற்றி அறியும் போது தான் தன் சூழ்நிலையை விட தன் நண்பர்கள் தான் முக்கியம் என்று முடிவெடுக்கும் அந்த பாத்திரத்தின் வலிமையை மற்றும் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடியும்.
மொத்தத்தில் ஷங்கர் ரசிக்கும்படியான நண்பனை கொடுத்து இருக்கிறார்.