Search This Blog

Monday, January 16, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

சென்னைல வாகன ஓட்டிகளுக்கு பொங்கல் மாதிரி பண்டிகைகள் வந்தாவே கொண்டடமா தான் இருக்கும் என்ன அப்பதான் ட்ராபிக் இல்லாத சென்னைய பார்க்க முடியும்.

இன்னைக்கு ஆபீஸ்க்கு 20 நிமிசத்துல வந்து சேர்ந்துவிட்டேன் போரூர் வழியா கிண்டி வர வேண்டும் என்றால் நாக்கு தள்ளிவிடும் அந்த அளவுக்கு நெரிசலான ஒரு போக்குவரத்து சாலை அது ஆனால் இன்று சுத்தமாக ட்ராபிக்கே இல்லை ஏன் போக்குவரத்து போலிசார்  கூட இல்லை. இன்று வண்டி ஓட்டுவதற்கு சந்தோசமா இருந்தது.

ஆனால் இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் தமிழத்தில் உள்ள எல்லா மக்களும் சென்னை நோக்கி படை எடுக்கிறார்கள் அதனால் சென்னை மக்கள் தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது இதை நான் எதிர்க்க வில்லை.

நமது அரசாங்கம் இப்போதே இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன மாதிரியான நடவடிக்கை என்றால் நமது தொழிற்சாலைகள், சாப்ட்வேர் கம்பெனீஸ் மற்றும் இதர நிறுவனங்களையும் தமிழகத்தின் எல்லா பகுதிகளில் அரபிக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மக்கள் வேலை வாய்ப்புக்காக தலைநகரை நோக்கி வருவதை தடுக்க முடியும்.

 அதற்கு தேவையான கட்டுமானங்களை ,கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை இல்லை என்றால் சென்னை ட்ராபிக்கில் மூச்சு திணற வேண்டியது தான்.

சென்னை புத்தக காட்சி 

சென்னைய பொறுத்த வரைக்கும் ஜனவரி மாதம் என்றால் இரண்டு சந்தோஷமான விஷயங்கள் சென்னை வாசிகளுக்கு 1) பொங்கல் நாட்களில் ட்ராபிக் இல்லா சென்னை 2) சென்னை புத்தக காட்சி

இந்த முறை புத்தக காட்சிக்கு போகி அன்று தான் போக முடிந்தது. டூ வீலர் பார்கிங்க்கு 10 ரூபாய் வாங்கினார்கள் 10  ரூபாய் எல்லாம் அதிகம் என்ன பண்ணறது வாங்கி தான் ஆகனும் .


நான் இந்த முறை அதிகமா புத்தகங்களை வாங்கவில்லை அளவாக தான் புத்தகங்களை வாங்கினேன்.

Stallகளுக்கு போகும் பாதைகளுக்கு புத்தக உலகை சேர்ந்த சாதனையாளர்களின் பெயரை சூட்டி இருந்தனர் நன்றாக இருந்தது.

பொதுவாக சட்டைகளில் பனியன்களில்(T-Shirt) ஆங்கிலத்தில் வாக்கியங்கள் பயன்படுத்துவர் ஆனால் புத்தக காட்சியில் தமிழ் வாக்கியங்கள் பயன் படுத்திய பனியன்கள் (T-Shirt) இருந்தது என்னுடைய சைஸ் XL இல்லாததால் வாங்க முடியவில்லை நான் மிக ரசித்த (T-Shirt) கீழே.



வீழ்வது இழிவாகாவது வீழ்ந்து கிடப்பது இழிவு .

ஞானி மற்றும் மணுயுஷபுத்திரன் ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருந்தனர்.


சென்னை புத்தக காட்சியில் நான் மிகவும் பிரமித்தது காஞ்சி மகா பெரியவர் சிலை தான் அந்த சிற்பத்தை பார்க்கும் போது எனக்கு உயிருள்ள ஒருவர் தான் அமர்ந்து இருபது போல் இருந்தது.


 


பொதுவா நான் புத்தக காட்சி போகும் போது எல்லாம் என் மனசுல தோணும் இதை ஏன் Chennai Trade Centre(CTC )ல வைக்க கூடாது. CTC மாதிரி எடத்துல வைச்சா ரொம்ப நல்ல இருக்கும்.
ஏன் என்றால் அந்த இடம் ரொம்ப கிளீன்னா இருக்கும் பைக் மற்றும் கார் பார்கிங் போன்ற வசதி நன்றாக இருக்கு.


வெளிபுறமும் ரொம்ப நல்ல இருக்கும். மிக காற்றோட்டமான அழகிய இடம் CTC  ஆனா காரணம் தெரியவில்லை ஏன் அந்த இடத்தை இவர்கள் பயன்படுத்தவில்லை என்று.


அநியாயக் கொள்ளை :


சென்னையில் பொங்கல் முன் தினத்தன்று அநியாயக் கொள்ளை அடித்தனர் கரும்பு விற்பனை என்ற பெயரில் ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருந்தது சென்னை. ஆனால் புது கோட்டையில் ஒரு கட்டு கரும்பு 100 ரூபாய். இதை தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு, அரசுக்கு தைரியம் இல்லை பாவம் சென்னை மக்கள்.


நல்ல கேள்வி:

உத்தர பிரதேசத்தில் இருக்கும் யானை சிலைகளுக்கு திரை போட்டீர்கள், அடுத்து லாந்தர் விளக்குகளை உடைப்பீர்களா என்று ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தேர்தல் ஆணையத்தை கேட்டுள்ளார்.

நல்ல கொள்கை:

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. அதனால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.


இன்றைய ரவுசு :

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை கொல்பவருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஜம்ஹூரி வத்தன் கட்சி அறிவித்துள்ளது

சென்னை எழிலகத்தில் பயங்கர தீ: கட்டடம் இடிந்து தீயணைப்பு வீரர் பலி

காணும் பொங்கல்: மெரீனாவில் குளிக்க தடை-போலீசார் குவிப்பு

பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பொங்கல் திருநாள் அன்று தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நான் ரசித்தது:



1 comment: