Search This Blog

Saturday, January 7, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)


வாழ்த்து:

தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த எழுத்தாளர், திரைக்கதை மன்னன் எனப் புகழப்படும் கே பாக்யராஜுக்கு இன்று பிறந்த நாள்.



திரு கே பாக்யராஜுக்கு இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 

ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது: அதிமுகவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது வெற்றிகரமாக இன்று முதல் விக்கட்டாக நக்கீரன் அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு காப்பாற்றபடும் சொன்ன ஜெயலலிதா யாருகிட்ட இருந்து காப்பாற்றபடும் என்று சொல்லவில்லை ஏன் என்றால் இன்று அதிமுகவினர் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து கொண்டு காவல்துறையினரை வைத்து கொண்டு நக்கீரன் அலுவலகத்தை நாள் முழுக்க தாக்கி உள்ளனர்.

அதை பற்றி இங்க படியுங்கள்


தன் கட்சியினரை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை இவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போகிறார் நல்ல காமெடி.

புத்தாண்டில் அதிமுக அட்டகாசமாக ஆட்டத்தை ஆரம்பித்து வைத்து உள்ளது.

கடலூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைக்க, 15 அமைச்சர்கள் இருந்தும் மின் வினியோகம் சீராகாவில்லை.

அடுத்த சூப்பர் மேட்டர்: காஷ்மீர் மாநிலத்தில் மின்சாரரம் கேட்டு வீதிக்கு வந்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிரோட இருந்தா தானே தண்ணி, மின்சாரம் etc ., கேட்பாங்கன்னு சுடுறாங்க போல இருக்கு.

மொத்தல புத்தாண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அட்டகாசமாக ஆரம்பித்து உள்ளது.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!!

சாலை பாதுகாப்பு வாரம் ஜன., 1 முதல் 7ம் தேதி வரை:

எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை இது பெரிய விஷயமில்லை ஆனால் எத்தனை பேருக்கு சாலை பாதுகாப்பு பற்றி தெரியும் என்று தெரியவில்லை.


இதுவரை சென்னையில் மட்டும் 10,297 விபத்துகள் நடந்து உள்ளது அதில் 1504 பேர் விபத்தில் இறந்து உள்ளனர் 8198 பேர் காயமடைந்து உள்ளனர்.

இது மிகவும் வேதனையான விஷயம். ஆனால் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அரசு போக்குவரத்து ஊழியர்களே சாலை விதிகளை கடைபிடிக்க மறக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் பிட் அடிப்பவர்களை பிடிக்க பறக்கும் படை அமைப்பது போல் அரசு போக்குவரத்து ஊழியர்களை கண்காணிக்க ஒரு படை அமைத்து அவர்களை கண்கானித்தால் ஓரளவு விபத்துகளை தடுக்கலாம்.

எல்லாத்தையும் விட ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் தன் மீதும், தன் குடும்பதின் மீதும் அக்கறை வேண்டும். சாலைகள் போர்க்களம் அல்ல என்பதையும் உணர வேண்டும்.

ஏன் என்றால் "உங்கள் குடும்பம் உங்களையே நம்பி உள்ளது".

சாலைகளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை.


 

இந்த பதிவை போடும் போது படித்தது

"காஞ்சிபுரத்தில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில், காரில் பயணித்த 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்."

சந்தேகம்:

அத்வானி ஜெயலலிதா சந்திக்க காத்துட்டு இருந்ததுக்கும், selective amnesia தனக்கு உண்டு என்று எல்லாம் ஜெயலலிதா சொன்னதற்கும் சசிகலாத்தான் காரணமா? இன்று நக்கீரன் அலுவலகம் தாக்க பட்டற்கும் சசிகலா தான் காரணம் என்று சொல்லுவார்களா?


இன்றைய ரவுசு:  

நக்கீரன் ஆபீஸ் மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல்.

வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.

நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

‘கோமா’ வில் இருந்த சுக்ராம் ஆம்புலன்சில் வந்தார் – திகாருக்கு செல்ல உத்தரவு.


No comments:

Post a Comment