Search This Blog

Saturday, December 31, 2011

புத்தாண்டு 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ஆனால் இந்த முறை விவசாயிகளுக்கு வழி பிறக்காது போலிருக்கிறது ஏனென்றால் வழியை "தானே" புயல் மூடிவிட்டது.

பொதுவாக தை மாதத்தில் தான் விளைந்த பயிர்களை அறுவடை செய்யப்படும் ஆனால் இந்த முறை அறுவடை செய்ய முடியாது டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது.

புயல் மழையால் 48,000 ஹெக்டேர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது என்ற செய்தியை படிக்கும் போது இந்த புத்தாண்டு மகிழ்ச்சியா விவசாயிகளுக்கு பிறக்கவில்லை என்பது மட்டும் உண்மை. இந்த அரசாங்கம் மனது வைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரம் வழங்கினால் அவர்களுக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சியாக பிறக்கும். விவசாயிகளின் மகிழ்ச்சி அரசாங்கத்தின் கையில்.

இந்த மாதிரி இயற்கை பேரிடர்ல இருந்து விவசாயிகளை காக்க அரசாங்கம் எதாவது காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தா நல்ல இருக்கும்.


இந்த 2011ம் வருடம் சிலருக்கு மகிழ்ச்சியா, சிலருக்கு வருத்தமா இருந்து இருக்கும். ஒவ்வொருத்தர் மகிழ்ச்சியும் துன்பமும் அவங்க அவங்க கைலதான் இருக்குது ஆனா தமிழர்களுக்கு,விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு  இந்த 2011 வருடம் ஒரு சோதனையான வருடம் தான். 



இந்த புகை படத்தை பார்க்கும் போது 2011ம் ஆண்டு முடிந்து 2012ம் தொடங்குவதை குறிப்பது போல் இருந்தாலும் மற்றுமோர் விசயத்தையும் சொல்லுவது போல் உள்ளது அது ஒவ்வொரு ஆண்டும் சுற்றுசுழல் பாதிக்கபட்டு கடல் நீர் மட்டம் உயருவதை குறிப்பது போல் உள்ளது.

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், செய்துவிட்டார்கள் என்று கவலை படாமல், மற்றவர்களை குறை கூறாமல் சுற்று சுழலை பாதுகாப்பதற்கு எதாவது செய்ய வேண்டும், சிறு முயற்சியாவது செய்ய வேண்டும்.

ஆபீஸ்ல ஒரு வாரம் shutdown நான் என்ன பண்ண போறேன்னு யோசிச்சுட்டு இருந்தேன் போன சனிக்கிழமை. ஒரு வாரம் போனதே தெரியல ஆனா உருப்பிடிய ஒன்னும் பண்ணல ஒவ்வொரு நிமிசமும் மின்னலை வீட வேகமா போகுது.

இப்போது தான் 2011 புத்தாண்டு கொண்டாடியது போல் இருக்கிறது ஆனால் இப்போது 2012 புத்தாண்டு வந்து விட்டது.

இந்த வருடம் மிக மிக விரைவாக சென்று விட்டது. ஒவ்வொரு ஆண்டும் செல்ல செல்ல தனிப்பட்ட முறையிலும், சமுக அளவிலும் நமக்கு பொறுப்புகளும், கடமைகளும் கூடிகொண்டே இருக்கிறது. அதை நாம் உணரவேண்டும். ஏன்னெனில் காலம் மிக விரைவாக ஓடிக்கொண்டு இருக்கின்றது ...

இந்த 2012 ஆண்டும் அணைத்து தரப்பு மக்களுக்கும் இனிமையான ஆண்டாக அமைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


அன்புடன் 
ராஜா 

Friday, December 30, 2011

கூடங்குளம்

கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி சமுக ஆர்வலர் அ. முத்துகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை





Wednesday, December 28, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)


கடந்த வாரம் நமது பாரத பிரதமர் திரு மண்மோகன் சிங் தமிழகத்திற்கு விஜயம் செய்தார். அவர் தமிழகத்திற்கு வந்த நேரம் கூடங்குளம் மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனைகளால் தமிழகம் கொதித்து கொண்டிருகிறது அனால் அதை பற்றி அவர் கவலை பட்ட மாதிரி தெரியவில்லை வந்தார் விழாவில் கலந்தார் சென்றார்.

இவர் இந்தியாவின் பிரதமராக வந்தது உண்மையில் இந்தியாவின் கஷ்ட காலம் தான் ஒரு பிரச்சனை சந்திக்க துணிவற்ற அந்த பிரச்னை தீர்ப்பதற்கு திறனற்ற இவர் எதற்காக அந்த பதவியில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

இந்திய பிரதமருக்கு எதிராக நமது புரட்சி கலைஞர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்தார் அனால் பேச்சில் இருந்த வேகம் செயலில் இல்லை மிகவும் வருதற்குரியது.

சென்னையில் கிறிஸ்மஸ் தினத்தன்று முல்லை பெரியாறு அனை பிரச்சனைக்காக பல்லாயிறுகணக்கான  மக்கள் திரண்டது மிகவும் பெருமையாக இருந்தது.


எனக்கு தெரிந்து தமிழர் பிரச்னையில் கவிஞர் தாமரை மிகவும் தெளிவாக பேசுகிறார் சீமானை விட.

கவிஞர் தாமரையின் பேசுக்கள் சில  :

"உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா, கர்நாடகா மதிப்பதில்லை. தமிழ்நாட்டில் இறையாண்மைக்கு குரல் கொடுக்கிறார்கள்."

"புதிய அணையை கட்டுவோம் எனும் கேரளா, அணையில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என உறுதிபாடு கொண்டுள்ளது. "

"மன்னராட்சி காலத்தில் இந்த மாதிரி தண்ணீர் பிரச்னை வந்தது கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சியிலும் நமக்கு பிரச்னை வந்ததில்லை. "

"மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இந்தியா ஆன பிறகு, பிரச்னை எழுந்து, அதை தீர்க்கவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது. "

"இந்தக் கூட்டம் சாதி மதம் தாண்டிய கூட்டம். ஆனால், இனம் மொழி தாண்டிய கூட்டம் அல்ல."

"தமிழ்நாடு தனி நாடாக இருக்க வேண்டும். இந்தியா, இந்தியா என்று சொல்லி என்னத்த சாதிச்சோம்."

"தேனியின் தன்னெழுச்சி போல் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியால் எழ வேண்டும்."

 
சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இவர்களில் 21 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களில் படகை ஓட்டி வந்த அன்சாரி என்பவரின் மனைவியுடம் அடங்குவார். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிர் தப்பினார்கள். படகை ஓட்டிச் சென்ற அன்சாரியும் உயிர் தப்பினார்.  என்று முடியுமோ இது போன்ற சோகங்கள்  


என்ன கொடுமை சார் இது :


தமிழகத்தில் தமிழக பிரச்சனைக்கு போராடியவர்கள் மீது வழக்கு ( வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு)  பிரச்சனைக்கு காரணமானவர்கள் ( மண்மோகன் சிங் ஒரு வகையில் ) உயர் பாதுகாப்பு

இன்றைய ரவுசு: 


முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் அவசர கால நடவடிக்கைகள் திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து துவக்கப்பட்ட ஒரே நாளில், மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

2012 - தேசிய கணித ஆண்டு: சென்னையில் நடந்த 'ராமானுஜர் 125-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் அறிவிப்பு.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்.

ரசித்தது:


 
Jokes :
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

 "ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்." 

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
 கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
 மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

18 + 

Little Johnny was sitting in class one day.
On this particular day, the teacher wanted to ask her class which part of the body went to heaven first.

One little girl raised her hand and said, "I think your mind goes to heaven first because you have to have a mind in order to believe in God. The teacher praises the little girl, as a little boy raised his hand.
The little boy says, "I think your heart goes to heaven first because God is all about love."
"Very good," said the teacher.

The teacher looked up and saw Little Johnny's hand up. "Oh no", she thought, "I'm not gonna like this.
Little Johnny, which part of the body do you think goes to heaven first?"
Little Johnny thinks for a minute and says, "Your feet."
The teacher asked him why he thought your feet go to heaven first. He replied, "Well, I was walking past my parents' bedroom last night and my mom had her feet up in the air and she said,

'Oh God, I'm coming!'"



உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

Friday, December 23, 2011

ஒன்று கூடுவோம்...வாரீர்..


நம் உரிமையை, நம் உணர்வை, முல்லை பெரியாறு அணையை காக்க ஒன்று கூடுவோம்.

இடம்: மெரினா, கண்ணகி சிலை அருகில்
நாள் : டிசம்பர் 25 - 2011
நேரம்:  மாலை 3.00மணி


To save our rights, To protect the Mullai Periyaru Dam please join together

Place : Marina Beach, Near kannagi statue.
Date  : December 25 - 2011
Time  :  3.00 PM


Wednesday, December 21, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

இந்த வாரம் தமிழகத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது

1 . சனி பெயர்ச்சி 2 . சசி பெயர்ச்சி



முதலாவது பெயர்ச்சி 2 1/2 வருடத்திருக்கு ஒரு முறை நடைபெறும் அனால் இரண்டாவது பெயர்ச்சி எபோதாவது தான் நடை பெறும். முதலாவது பெயர்ச்சி நிலையானது இரண்டாவது நிலையற்றது.

இரண்டாவது பெயர்ச்சியை ஆ தி மு க வினர் தொண்டர்கள் பெருவாரியாக கொண்டாடினர் ஆனால் தலைவர்கள் கொண்டாட வில்லை அவர்களுக்கு தெரியும் இது நிரந்தரம் இல்லை என்று ஆனால் பாவம் தொண்டர்கள்.

சில பத்திரிகைகள் குறிப்பாக தினமலர் போன்ற பத்திரிகைகள் சசிகலாவை தாக்கி கட்டுரைகள் எழுதி வருகிறது அதாவது சசிகலா மோசமானவர்... மோசடியானவர் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் சசிகலாவினால் தான் ஊழல் நடை பெற்றது ஜெயலலிதாவிற்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் தலை இட்டார் அதுவும் இல்லாமல் சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தினர் ஆ தி மு க வை ஆட்டி படைத்தனர் என்றும் சொல்லுகின்றனர்.

மொத்தத்தில் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் ஜெயலலிதா அப்பாவி அவரை ஏமாற்றி விட்டனர் என்று எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஜெயலலிதா இவர்கள் கூறுவது போல் அப்பாவி என்பது உண்மையானால்

இவர் எந்த தகுதியை வைத்து தமிழக முதல்வர் பதவிக்கு போட்டி இட்டார் தன்னுடைய சொந்த வீட்டை நிர்வாகிக்க தெரியாத இவர் தன்னுடைய சொந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத இவர் எப்படி தமிழக மக்களை பாதுகாத்து நல்லாட்சியை வழங்குவார்.

நாளைக்கு இதே சசிகலா திரும்ப ஜெயலலிதாவிடம் சென்று அடைந்தால் இந்த பத்திரிகைகள் என்ன சொல்லும் ?

மொத்தத்தில் என்னமோ நடக்கிறது அது எதற்காக என்று தெரியவில்லை சொத்து குவிப்பு வழக்கை திசை திருப்புவதற்கவா அல்லது வேறு காரணத்திற்குகா என்று போக போக தெரிந்துவிடும்.

ஆனால் இந்த பத்திரிகைகள் "முதல்வர் ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது" இதற்கெல்லாம் காரணம் 'சசிகலா' என்று சொல்லாமல் இருந்தால் சரி !

அனால் அடுத்த நாடாளுமன்றம் தேர்தலுக்கு முன் ஜெயா மற்றும் சசி ஒன்றிணைவது உறுதி ஏன் என்றால் ஜெயலலிதாவிற்கு தேவர் ஜாதி ஓட்டுகள் முக்கியம்!!!.


நல்ல கேள்வி: கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றி வைத்துள்ளது எப்படி?.

இன்றைய ரவுசு: 
  1. கன்னியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ந்தார் சனிபகவான் 
  2. கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை 
  3. லோக்பால் மசோதாவை ஏற்க மாட்டேன்; உண்ணாவிரதம் இருப்பேன், சிறைகளை நிரப்புவேன்- ஹசாரே
  4. பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும்: பாஜக
  5. ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்! 
  6. கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் பாரத் ரத்னா பட்டம் வழங்குவது, அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதியரசருமான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்

இந்த வார டீல்

புன்ட்டோவுக்கு ரூ.1.4 லட்சம், லீனியாவுக்கு ரூ.1.75 லட்சம் ஆஃபர்! அதிரடி சலுகைகளை ஃபியட் அறிவித்துள்ளது.



Jokes: 
A dietician was once addressing a large audience in Chicago. "The material we put into our stomachs is enough to have killed most of us sitting here, years ago. Red meat is awful. Vegetables can be disastrous, and none of us realizes the germs in our drinking water. But there is one thing that is the most dangerous of all and we all of us eat it. Can anyone here tell me what lethal product I'm referring to? You, sir, in the first row, please give us your idea."

The man lowered his head and said, "Wedding cake

கனிமொழி ஜாமினை கூடங்குளம் நியூஸ் கவுத்துச்சு,

கூடங்குளம் நியூஸ், முல்லை பெரியாறு கவுத்துச்சு...

முல்லைப்பெரியாறையும் இப்பொ ஜெ நியூஸ் கவுத்திடுச்சு...

####
ஜெயலலிதா சொல்றாங்களாமே, தாங்கஸ் டு வாசன் ஐ கேர்.. தெளிவா பாக்குறாங்களாம்... :))

லத்திகா படத்தின் 500 வது நாள் வீழா விற்கு வருகை தரும் ஒபாமா அவர்களே தங்களை அன்புடன் இந்த பவர் ஸ்டார் வரேவேற்கேறேன்.


உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

Saturday, December 17, 2011

புரியவில்லை

என்னடா புரியவில்லைன்னு ஒரு போஸ்டா யோசிக்காதிங்க... எனக்கு என்ன புரியலனா 


 


விஷயம் 1) தொடர்ந்து பல வாரமா முல்லை பெரியாறு விவகாரத்தில தமிழக மக்கள் போராடுறாங்க, கேரளா அரசாங்கம் இந்திய ஒருமைப்பாடுக்கு எதிரா நடந்துக்குது  அதை பத்தி ஒரு முடிவும் எடுக்காம மத்திய அரசு அமைதியா இருக்கு.

விஷயம் 2) தொடர்ந்து பல மாசமா கூடங்குளத்துல மக்கள் போராடறாங்க ஆனா மன்மோகன் சிங் "கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும்ன்னு" ரஷ்யாவில் சொல்லுறாரு.

விஷயம் 3) தொடர்ந்து பல வருசமா தமிழக மீனவன் இலங்கை இராணுவதலா தாக்க படுறாங்க இதுக்கும் ஒரு முடிவு இல்லை அதுவும் மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க மாட்டுது.

விஷயம் 4) காவேரி நீர் பிரச்சனையை இன்னும் முடிக்கல.

விஷயம் 5) உலகத்துல எல்லா இடத்துலையும் தமிழனை மட்டும் அடிக்க தயங்கரதே இல்லை,யோசிக்காம எதை பத்தியும் கவலை படாம அடிக்கறாங்க.

இவ்வளவு விசயத்துல தீர்க்கமான ஒரு முடிவு எடுக்காம இந்திய அரசாங்கம் இருக்கு ஏன் என்று புரியவில்லை.
   

எனக்கு என்னமோ தமிழ்நாட்டு மக்கள் இந்திய குடி மக்களா மத்திய அரசு கருதவில்லையோனு நினைக்கறேன். தமிழன், தமிழ் நாட்டுகாரனா நாலு நாள் கத்துவான் அப்பறம் அவன் அவன் அவன் வேலை பாக்கபோறான் அப்படின்னு ஒரு எண்ணமானு புரியல.

யாரையாவது கேட்ட நம்ம அரசியல்வாதிங்க சரி இல்ல அவங்க கிட்ட ஒரு ஒற்றுமை இல்லை சொல்லு வாங்க அவங்க சொல்லுறது சரின்னாலும் முதல தமிழன் கிட்ட, தமிழ் மக்கள் கிட்ட ஒத்துமை இருக்கானு கேட்டா எனக்கு  என்னமோ இல்லைன்னு தான் தோணுது.

ஏன்யென்றால் ஈழ தமிழர்கள் பிரச்சனை ஆகட்டும் , காவேரி பிரச்சனை ஆகட்டும், கூடங்குளம்  பிரச்சனை ஆகட்டும், முல்லை பெரியாறு பிரச்சனை ஆகட்டும் எதாவது ஒரு பிரச்சனைக்கு மொத்த தமிழ் நாடும் ஒன்ன ஒரே குரல் குடுத்து போராடி இருக்க.. இல்லை ஏன் யென்றால் நம்ம வேலை நமக்கு முக்கியம்.  

இங்க கூடங்குளத்துல தங்கள் உடமை, உயிர் பற்றிய பயத்துல மக்கள் போரடறங்க ஆனா, நம்ம பிரதமர் அசால்டா ரஷ்யா போய் ரஷ்ய உறவு முக்கியம், கொடுத்த வாக்குறுதி காபற்றப்படுமுன்னு சொல்லுறாரு இவரு நமக்கு பிரதமர இல்லை ரஷ்ய நட்டு அடிமையானு தெரியல.

இவர் இந்திய நாட்டின் பிரதமரா, அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் இந்தியாவிற்கான தூதரா என்று புரியவில்லை.

அதுபோல முல்லை பெரியாறு பிரச்சன்னைய தீர்க்க முடியல அப்பறும் இந்த ஆள் என்ன ம...க்கு அங்க பிரதமரா இருக்காருன்னு தெரியல.

இந்த உலகுத்துல சொந்த நாட்டுல ஒரு மாநிலத்துல இருந்து ஒரு மாநிலத்துக்கு முதன் முதல அகதியா வந்த பெருமை தமிழர்களுக்கு தான் சேரும் அதை வாங்கி தந்த பெருமை இப்போதைய காங்கிரஸ் அரசுக்கு தான் சேரும்.. Mr. Manmohan you did a wonderful job.. simply superb..keep it up...


இலங்கைக்கு பயப்படற முதல் நாடு இந்தியாவா தான் இருக்கும் அதுவும் இந்த தைரியம் இல்லாத இந்த பிரதமரா தான் இருக்கும்.

வெக்கமா இருக்கு இதை எல்லாம் பாக்கும் போது ஒரு நாளைக்கு இந்தியர்கள் தங்களை இந்தியர்னு சொல்ல வெட்க பட கூடிய நாள் வெகு தொலவில் இல்லை இந்த மத்திய அரசாங்கம் அதை கூடிய சிக்கிரம் கொண்டு வந்துடும்.

இலங்கைய அடக்க முடியலையா சொல்லுங்க சொல்லிட்டு ஒவ்வொரு மீனவனுக்கும் துப்பாக்கி கொடுத்து மீன் புடிக்க கடலுக்கு அனுப்புங்க அதுக்கு அப்புறம் தமிழ் மீனவன் தன்னை காப்பாதிக்க முடியாம செத்தாலும் பரவா இல்லை நாங்க உங்களை கேள்வி கேட்க மாட்டோம். 

எங்களுக்கு வேண்டியது முடிவு ஒரு நிரந்தரமான அதை எடுக்க எது தடுக்குதுன்னு புரியவில்லை.

 ஏன் தமிழர்கள் விசயத்துல இவ்வளவு பாகுபாடு நாங்க அப்படி என்ன தப்பு பண்னோம்.

இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கூடங்குளம், முல்லைபெரியாறு என்று தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது தமிழர்களை இந்த அளவுக்கு அலட்சியப்படுத்துவது நல்லதற்கல்ல.

ஒரு வேலை இந்தியாவின் ஒரு பகுதியா தமிழ்நாடு இருக்க கூடாதுன்னு நினைகறாங்கலோனு புரிய வில்லை ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்திய துண்டு துண்டாக போகும் என்றால் முதலில் உடையும் மாநிலம் தமிழகமாக தான் இருக்கும்.

ஒரு காலத்தில் ஒற்றுமைக்கு பேர் போன , வீரத்திற்கு பேர் போன, போர் குணம் நிறைந்த தமிழர்கள் இன்று அதை எல்லாம் தொலைத்து விட்டு இன்று எதுவும் அற்று இன்று இந்த மண்ணில் ஒரு புழுவை போல வாழ்கிறார்கலோனு ஒரு சந்தேகம் வருது என்று இந்த நிலை மாறும் என்று புரியவில்லை.


இன்றைய செய்தி : கேரளாவில் இருந்து 170 தமிழ் குடும்பங்கள் விரட்டியடிப்பு

அனால் ஒன்று  மட்டும் நிச்சயம் தமிழ் இனத்திற்கெதிரான துரோகங்கள் நல்லதற்கல்ல.

Tuesday, December 13, 2011

தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர்.

சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது.

தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம்.

ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி.


அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர்.

இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும்.

அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள்.

வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம்.

இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன்.

அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் .

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான்.

ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை.

எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.

புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன். இரு சமூகங்களின் காவல் தெய்வங்களாக இன்று மாறி நிற்கிறார்கள் தாயகத்திற்காகப் போராடிய பூலித்தேவனும், ஒண்டி வீரனும்.



நன்றி - tamil.oneindia.in